என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வால்பாறை- சாலக்குடி இடையே போக்குவரத்துக்கு தடை நீடிப்பு
- தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்-ஆதிவாசி மக்கள் அவதி
- சாலையை விரைவாக சீரமைத்து போக்குவரத்தை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட சாலக்குடி அருகே அதிர ப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது.
அங்கு பல்வேறு மாநிலம் மற்றும் வெளி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கி றார்கள்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மழுக்க பாறை எஸ்டேட் வழியாக 80 கிலோமீட்டர் வனபகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வரு கின்றனர்.
வன பகுதி வழியாக செல்லும் போது வனவி லங்குகளை பார்ப்பது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதால், அந்த சாலையில் பயணிக்க அதிகளவில் விரும்புவார்கள்.
மழுக்கப் பாறை பகுதி தேயிலைத் தோட்ட தொழி லாளர்களும் ஆயிரக்கண க்கான ஆதிவாசி பழங்குடி மக்களும் அத்தியாவிசிய மான பொருட்கள் வாங்கு வது உள்பட பல்வேறு வேலைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பு மழுக்குப்பாறை அதிரப்பள்ளி சாலை இடையே ஆம்பளபாறை என்ற இடத்தில் கன மழை பெய்து மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப் பட்டது.
உடனடியாக சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில் சாலையை முழுமையாக சீரமைக்க முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்துக்கு நேற்று வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அந்த வழியாக பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டி ருந்தது.
இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு பணி முடிவடையாமல் உள்ளது. பணி முற்றிலும் நிறைவ டையும் வரை வால்பாறை-சாலக்குடி இடையே போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்த னர்.
இதனால் வால்பாறை தங்கும் விடுதி உரிமை யாளர்கள் ஹோட்டல்ஸ் மழுக்குப்பாறை எஸ்டேட் தொழிலாளர்கள், வனப்பகு தியில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் ஆகி யோர் போக்குவரத்து இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சாலையை விரைவாக சீரமைத்து போக்குவரத்தை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்