search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை
    X

    குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை

    • கமுதி யூனியனில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
    • யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடந்தது.

    பசும்பொன்

    கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாளர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கைகளை துணிச்சலுடன் தெரிவிக்க லாம். முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.294 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மணிமேகலை (ஆணையாளர்): 100 நாள் வேலை திட்டத்தில அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.

    அன்பரசு (பேரையூர்): வேளாண்மை காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்):- 2.5 ஏக்கரில் நெல் விவசாயம் செய்தேன் களை எடுக்க முடியவில்லை.மணிமேகலை (ஆணை யாளர்):- 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண்மை பணிக்கு பயன்படுத்த ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. பாக்கு வெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×