search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பேச்சு போட்டி
    X

    மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பேச்சு போட்டி

    • மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் பசும்பொன்னில் உள்ள மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நேரு யுவகேந்திரா ,முத்தமிழ் அறக்கட்டளை இணைந்து யுவா சாம்வாட் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

    இந்நிகழ்ச்சியில் 2047-ல் இந்தியா எவ்வாறு இருக்கும் என்றும், நமது இந்தியாவின் கலாச்சாரம் எவ்வாறு பாதுகாக்க பட வேண்டும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக மீனாட்சி சுந்தரம், அன்புதுரை, ஜெயசந்திரன், பாண்டீஸ்வரி,டெய்சி ராணி, சிறப்பு விருந்தி னார்களாக கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கியாஸ் உரிமையாளர் பாலா என்ற பதினெட்டாம்படியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் அமலி வரவேற்றார்.கல்லூரி செயலாளர் சேசு மேரி, நேருயுவகேந்திரா தலைவர் பிரவீன்குமார் ஆகியோர் பேசினர்.விழா ஏற்பாடுகளை முத்தமிழ் அறக்கட்டளை உறுபினர்கள் சுரேஷ் கண்ணன், நாகராஜ் கண்ணன், வேலவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவின் முடிவில் முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×