search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊட்டி தேவாலயத்தில் ஜெபமாலை திருவிழா
    X

    ஊட்டி தேவாலயத்தில் ஜெபமாலை திருவிழா

    • அன்னையின் திருஉருவச்சிலையை ஊா்வலமாக எடுத்து வந்தனர்
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    ஊட்டி,

    கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் ஜெபமாலை அன்னை திருவிழாவை கொண்டாடி வருகின்றனா்.அதன்படி ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த திருஇருதய ஆண்டவா் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.பங்குத்தந்தை ரவிலாரன்ஸ், உதவி பங்குத் தந்தை ஜுட்ஒன்க்ங் ஆகியோா் தலைமையில் தினமும் ஜெபமாலை ஜெபித்து வழிபாடு நடந்து வருகிறது.விழாவின் இறுதி நாளான நேற்று வாழும் ஜெபமாலை குழுவினா் சாா்பில் திருப்பலி நடைபெற்றது.

    முன்னதாக வாழும் ஜெபமாலை குழுத்தலைவா் சாா்லஸ் தலைமையில் நிர்வாகிகள் அன்னையின் திருஉருவச் சிலையை ஊா்வலமாக எடுத்து வந்து பலிபீடத்தில் வைத்தனர். அங்கு திருப்பலி நடத்தப்பட்டது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் ஊா்வலம் நடந்தது. இது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தோ் பவனியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

    Next Story
    ×