search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறந்தவெளி கிணறுகளில் பாதுகாப்பு நடவடிக்கை- கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்

    திறந்தவெளி கிணறுகளில் பாதுகாப்பு நடவடிக்கை- கலெக்டர் அறிவுறுத்தல்

    • உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
    • மேற்கண்ட அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட ங்களில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள், குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்க ளை ஏற்படுத்துவதுடன், சில உயிரிழப்புகள் நிகழவும் காரணமாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி கள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்தி யமான அபாயங்களைக் குறைக்க, அனைத்து திறந்த வெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளையும் திறம்பட பாதுகாப்பது அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தல் மற்றும் இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளை விக்கக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில் இவைகளைக் கண்டறிந்து உடனடியாக மூடவும் தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உடனடி நடவடிக்கையாக கைவிட ப்பட்ட குவாரி குழிகளுக்கு சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோன்று நெடுஞ்சாலைகளில், கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளை வலுவான தடுப்புகளை அமைத்திடவும், அவை ஓட்டுநர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். மேற்கண்ட அபாயகரமான இடங்க ளுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×