search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்தநாளையொட்டி சமத்துவ விருந்துபொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்ட சரத்குமார்
    X

    சரத்குமார் தனது பிறந்தநாளையொட்டி சமத்துவ விருந்தை தொடங்கி வைத்த காட்சி.

    பிறந்தநாளையொட்டி சமத்துவ விருந்துபொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்ட சரத்குமார்

    • சமத்துவ விருந்து சேலம் தாரமங்கலம் மெயின் ரோடு இரும்பாலை மோகன்நகர் பி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் மகளி ரணி செயலாளர் செல்வி உறுதிமொழி வாசித்தார்.

    சேலம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பிறந்த நாளையொட்டி சமத்துவ விருந்து சேலம் தாரமங்கலம் மெயின் ரோடு இரும்பாலை மோகன்நகர் பி.ஆர்.ஆர் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    உறுதி மொழி

    இந்த நிகழ்ச்சியில் மகளி ரணி செயலாளர் செல்வி உறுதிமொழி வாசித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் வரவேற்றார். சேலம் மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ஜவகர், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜு,

    தொகுதி செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ விருந்து சரத்குமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்து பொது மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தி பேசியதாவது:-

    இந்த சமத்துவ விருந்தை ஒற்றுமை வலியுறுத்தும் விருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். சமத்துவம் என்பது கொள்கை அடிப்ப

    டையில் மட்டும் இல்லா

    மல் அனைவரது எண்ணங்க ளிலும் இருக்க வேண்டும்.தானத்தில் சிறந்ததானம் அன்னதானம். அந்த வகையில் மாதந்தோறும் 10 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சுந்தர், சமத்துவ விருந்து குறித்து விளக்கி பேசினார். பொருளாளர் சுந்தரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், மகாலிங்கம், கொள்கை பரப்புச் செயலா ளர் விவேகானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் மாவட்ட செயலாளர் மாதையன், சிவா, முருகேசன், சரவணன், தங்கவேல், மோகனவேல், கோவிந்தசாமி, பகுதி, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மகளிரணி துணை செயலாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.

    Next Story
    ×