search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோவில் தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோவில் தேரோட்டம்

    • சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.
    • மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககி ரியில் உள்ள சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.

    தினசரி இரவு சாமி அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அன்னபக்ஷி, சிங்கம், அனுமந்தம், கருடம், சேஷம், யானை ஆகிய வாகனங்களில் வீதி உலா நடந்தது.

    7-ம் நாள் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வீதி உலா, 9-ம் நாளான நேற்று காலை சாமியை தேருக்கு கொண்டு சென்று அபிஷேக ஆராதனை செய்தனர். மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    தொடர்ந்து பெரிய தேரில் சென்னகேசவ பெருமாள் சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான டி.எம்.செல்வகணபதி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தேர்வீதி, மலையடிவாரம், முஸ்லீம்தெரு வழியாக இழுத்து சென்று, நிலை நிறுத்தினர். திருத்தேர் உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடன் சென்னகேசவப் பெருமாள் அருள்பாலித்தார்.

    விழாவில் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, ஆர்.டி.ஓ(பொ) தணிக்காசலம், டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், தாசில்தார் அறிவுடைநம்பி, சங்ககிரி பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமொழி, துணைத்தலைவர் அருண்பிரபு, செயல்அ லுவலர் சுலைமான்சேட், அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கரன், திருவிழா ஆலோசனை குழுவினர் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரம், சங்ககிரி லாரி உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், பக்காளியூர் சரவணன், சண்முகசுந்தரம் சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×