search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முறையான சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
    X

    முறையான சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

    • 8-ந்தேதிக்குள் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்க உத்தரவாதம்
    • குறிப்பிட்ட தேதியில் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட முடிவு

    ஊட்டி,

    ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள முறையாக சம்பளம் வழங்க வேண்டும், தீபாவளி முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதில் நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு சங்கத் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வினோத், பொருளாளர் நவீன்சந்திரன், நகராட்சி-உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க செயலாளர் சேகர், பொருளாளர் ரவி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    பின்னர் ஊழியர் சங்க பிரதிநிதிகளிடம் நகராட்சி கமிஷனர் ஏகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 8-ந்தேதிக்குள் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    குறிப்பிட்ட தேதியில் சம்பளம் மற்றும் தீபாவளி முன்பணம் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×