search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிங்கம்புணரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
    • அரசின் நலத்திட்டங்களை பெற்று பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பெண்களுக்கு உரிமைத்ெதாகை வழங்கி 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-சிவகங்கை மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,784 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    முதல் கட்டத்தில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 113 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 897 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 66 ஆயிரத்து 700 பெண்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகையும் பெற்று வருகின்றனர். இதன் வாயிலாக சராசரியாக 75 சதவீத பெண்கள் அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் அதனை சிறந்த முறையில் பயன் படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, துணைத்தலைவர் இந்தியன்செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரம்யா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய அயலக அணி சன் சீமான் சுப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெளிநாடுகள்-பல்வேறு மாநிலங்களில் இருந்து வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன.
    • கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேட்டங்குடி பறவை கள் சரணாலயம் அமைந்து உள்ளது. இந்த சரணால யத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து மார்ச் மாத இறுதிவரை சுமார் 5 மாதங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முக்குளிப்பான், கூழைக்கடா, பெரிய நீர்காகம், பாம்பு தாரா, குளத்துக் கொக்கு, மடையான், உண்ணிக் கொக்கு, பக்கா, செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரி நீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், மார்களியன், ஊசிவால் வாத்து, புள்ளி அழகு வாத்து, நீலச்சிறவி, பூனைப்பருந்து, வெண்மார்பூ மின் கொத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை இனங்கள் பருவமழை காலங்களில் இச்சரணாலயத்திற்கு இன பெருக்கத்திற்காக வருகை புரிவது வழக்கமாகும்.

    தற்சமயம் இந்த ஆண்டு முதல் கட்டமாக வெளி மாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, முக்குளிப்பான், குளத்து கொக்கு போன்ற பறவை இனங்களே வருகை தந்துள்ளது. இதுகுறித்து வன அலுவலர் தெரிவிக்கையில். பொதுவாக இங்கு இனப்பெருக்கத்திற்காக வருகைபுரியும் பறவை இனங்கள் உடனடியாக தங்களது சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. மாறாக தட்பவெப்ப சூழ்நிலை, இறைதேடல், மற்றும் தங்குமிடம் அமைத்தல் போன்றவற்றை தேர்வு செய்து அதன் பின்னரே அடைகாக்கும் நிலைக்கு செல்லும். இந்த ஆண்டு பருவமழை காலம் சற்று காலதாமதமாக தொடங்கியுள்ள காரணத்தினால் வெளி மாநில பறவைகள் மட்டும் தற்சமயம் வருகை புரிந்து அதற்கான சூழ்நிலையை தேர்வு செய்து வருகிறது. மேலும் வர இருக்கின்ற ஓரிரு வாரங்களில் வெளிநாடு களில் இருந்து வரும் பறவை இனங்களின் வருகை முழுமையாக வரக்கூடும் என்றார்.

    சிவகங்கை மாவட்டத்தி லேயே ஒரே ஒரு சரணாலயமாக இருக்கக்கூடிய இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றிலும் தற்சமயம் சீமை கருவேலை மரங்களும், நாட்டு கருவேலை மரங்களும் இருந்து வருகிறது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி வரும் காலகட்டங்களில் இங்கு வரும் பறவை இனங்கள் தங்களின் இரைக்காக வெகு தூரம் செல்லாமல் இருப்பதை தவிர்க்க பறவைகளுக்கு பலன் தரக்கூடிய பழ வகை மரக்கன்றுகளையும், குறுங்காடுகள், அடர்ந்த வனங்கள் போன்ற வற்றை இப்பகுதிகளில் அமைத்து ஒரு சாதக மான சூழ்நிலையை இப்பறவை இனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கூறி வருகின்றனர். கடந்த 1977 முதல் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக இருந்து வரும் இந்த இந்த சரணாலயத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இதனை மேம்படுத்தி அவர்களின் வருகையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யாக இருந்து வரு கிறது என்பது குறிப்பி டத்தக்கது.

    • தேவகோட்டையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம்் செய்யப்பட்டது.
    • தேவகோட்டை நகர் மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகர் மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தர லிங்கம் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முதல் நிலை நகராட்சியாக உள்ள தேவகோட்டையை, தேர்வு நிலை நகராட்சியைாக தரம் உயர்த்தும் தீர்மானத்தை தலைவர் சுந்தரலிங்கம் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

    பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில், தேவகோட்டை யில் தொழில் பூங்கா உரு வாக்க வேண்டும். சாலை களில் கழிவு நீர் கால் வாய்கள் அமைக்க வேண்டும், பன்றிகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். சிமெண்ட், தார் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    அரசு பள்ளிக்கு மாற்று பாதையில் சாலை வசதி செய்து தர வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    அதற்கு சுந்தரலிங்கம் பதிலளிக்கையில், திருப்பத்தூரில் சாலையோரம் உள்ள மண் மேடுகளை அகற்றவும், தேவ கோட்டையில் தொழில் பூங்கா தொடங்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகரில் டெங்கு பரவாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கூடுதலாக கொள்முதல் செய்து 27 வார்டுகளிலும் கொசு மருந்துஅடிக்கப்படும் என்றார்.

    • மடப்பரம் காளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் போது உதவி ஆணையர் தங்க கொலுசு திருடினார்.
    • அதன்பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    தமிழக அரசின் அறநிலை யத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிர சித்தி பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது கோவில் அறநி லையத்துறை உதவி ஆணை யர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த தலா நான்கு சவரன் எடையுள்ள இரு தங்க கொலுசுகளை மறைத்து வைப்பது தெரிந்தது.

    இதுகுறித்து அங்கிருந்து அலுவலர்கள் கேட்டபோது நான்கு சவரன் எடையுள்ள ஒரு கொலுசை மட்டும் வில்வமூர்த்தி திரும்ப ஒப்ப டைத்துள்ளார். மற்றொரு கொலுசை கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படு கிறது. உண்டியல் எண்ணும் இடத்தில் இருந்த கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வில்வ மூர்த்தி தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மடப்புரம் கோவில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிவகங்கை இணை ஆணையருக்கு இச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மானாமதுரை அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் நேற்று இரவு திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வில்வமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    சிவகங்ைக

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 70லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பொறியாளர் உமாராணி, துணை தலைவர் செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் பிரபு, பாசறை இணை செயலாளர் மோசஸ், சதிஷ்பாலு, ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, மறவமங்கலம் ஊர் மக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலை மையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள் பிற் காலத்தில் குழந்தை தொழி லாளர்களாக மாறுவதை தடுக்கும் வகையில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, காவல் துறை ஆள்கடத்தல் பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆகியோர் அடங்கிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் கடந்த 13-ந்தேதி சிவகங்கை மற்றும் மானாமதுரை, 18-ந்தேதி இளையான்குடி புதூர் மற்றும் 20-ந்தேதி

    திருப்பாச்சேத்தி அருகில் டி.வேலாங்குளம் பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    இளையான்குடி புதூர் பகுதியில் 4 பள்ளி செல்லா இடைநின்ற மாணவ-மாணவிகள், மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்த 1 மாணவி ஆகி யோரை அவர்கள் வீட் டிற்கு சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

    மேலும் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லா இடைநின்ற 1 மாணவியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு இல்லத்தில் சேர்க்கப் பட்டுள்ளார். இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளிச்செல்லா இடை நின்ற குழந்தைகளை கண்ட றிந்து பள்ளிகளில் சேர்க்கப் பட்டு கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரையில் உளள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
    • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.

    மானாமதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பகுதியில் இனிப்பு, கார வகைகள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்து றையினர் திடீர் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர–வின்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சர வணக்குமார் மானா மதுரை நகரிலுள்ள பல இனிப்பு வகை கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத் தினார்.

    இதில் தரமான முறையில் இனிப்பு, கார வகைகள் தயார் செய்யப்படுகிறதா? என்று கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கெட்டுப்போன மற்றும் அதிக கலர் பொடி கலந்து உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகை யில் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.

    மேலும் இவற்றை பறிமு தல் செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களிடம் இனிப்பு, காரம் தயாரிப்புக்கு ஒருமுறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் வடி கட்டி பயன்படுத்த கூடாது. இனிப்பு வகைகளில் அதிக கலர் பொடி சேர்க்க கூடாது என்றும் சரவணக்குமார் அறிவுறுத்தினார்.

    • முகாம்வாழ் தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம் நகர்செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மான மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கிலூரணி பகுதியில் ரூ.10.55 கோடி மதிப்பீட்டில் 188 முகாம் வாழ் தமிழர்களுக்கு குடியிருப்புக்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கிலூரணி, சென்னாலக் குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. இங்கு மொத்தம் 1,087 குடும்பங் களை சார்ந்த 3,206 நபர்கள் உள்ளனர்.

    அதில், ஒக்கூர் ஊராட்சி யில் 235 குடும்பங்களைச் சார்ந்த 669 நபர்கள் பயன்பெறும் வகையில், 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரால் கடந்த 17-ந்தேதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

    மீதமுள்ள 5 பகுதிகளிலும் மொத்தம் 372 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூங்கி லூரணி பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகா மில் குடியிருக்கும் 188 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இலங்கை மறு வாழ்வு திட்டத்தின் கீழ், தலா ரூ.5.61 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1,054.68 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகளாக வடிவமைத்து மொத்தம் 47 தொகுப்பு வீடுகளை கட்டு வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதா அண்ணா துரை, மாங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் முருக வள்ளி தேசிங்கு ராஜா, நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம் நகர்செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பி னர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லிட்டருக்கு ரூ.33 என்று உச்சகட்ட விலையை நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதல் லாபம் கிடைப்ப தற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி யாளர்கள், பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் சமமான அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.

    பால் உற்பத்தியை பெருக்குவது கிராமப் புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.0.50 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்க ளை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு ரூ.1,35,35, 653.80 மதிப் பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று இந்த ஆண்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட வுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) ராஜசேகர் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மண்டல மேலாளர் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொது மக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங் கொண்டம், கருர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி அன்று 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி அன்று 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி அன்று 520 கூடுதல் பஸ்களும், மேலும் திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி அன்று 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11-ந் தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.மேலும் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தீபாவளி முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கம்பன் நினைவிட சாலையை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
    • தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் நினைவிடம் செல்லும் சாலை பல ஆண் டுகளாய் குண்டும், குழியு மாய் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்து வருகின்றனர். நாட் டரசன் கோட்டையிலிருந்து கருதுப்பட்டி, கண்டனிப் பட்டி வழியே காளையார் கோவில் செல்லும் சாலை உள்ளது.

    நாட்டரசன்கோட்டையி லிருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கி.மீ. தூரம் செல்லும் இந்த சாலை பின்னர் தொண்டி தேசிய நெடுஞ்சாலையுடன் இணை கிறது. நாட்டரசன்கோட்டை வழியே காளையார்கோவில் செல்லும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகின்றனர். 4 கி.மீ. தூரமுள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சா லையாக மாற்றப்பட்ட பின் னர் எவ்வித பராமரிப் பும் செய்யாமல் விடப்பட்டுள் ளது. நாட்டரசன்கோட்டை யிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள கம்பன் நினைவிடத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்புவரை நாட்டர சன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய 3 கி.மீ. தூரம் காளையார் கோவில் யூனியன் சாலையா கவும் உள்ளது.

    இதில் பேரூராட்சி எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய 3 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை அமைக்க காளையார் கோவில் யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக் காததால் சாலை, போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலை யில் உள்ளது.

    மதுரை, தொண்டி சாலையில் செல்லும் சுற்று லாப்பயணிகள் நாட்டரசன் கோட்டை ஊருக்குள் வந்து கண்ணுடையநாயகி அம்மன் கோவில், கம்பன் நினைவி டம் சென்று மீண்டும் மதுரை, தொண்டி சாலை யில் இணைந்து கொள்ளும் வகையில் உள்வட்ட சாலை யாக இருந்தது. பல ஆண்டு களாய் சாலை பழுதால் தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட் டுள்ளது.

    இதுகுறித்து கிராம மக் கள் கூறுகையில், பிரதான சுற்றுலாத்தலமான கம்பன் நினைவிட சாலை பழுத டைந்து சுமார் 10 ஆண்டுக ளுக்கும் மேல் ஆகிவிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இச்சாலையை பார்வையிட் டது. சாலை பழுது குறித்து பல்வேறு புகார்கள் அனுப்பி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக புதிய சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • காளையார்கோவிலை பேரூராட்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விவசாய சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காளையார்கோவில்

    தமிழ்நாடு விவசாய சங் கத்தின் சிவகங்கை மாவட்ட அளவிலான 27-வது மாநாடு காளையார் கோவி லில் நடைபெற்றது. மாநில விவசாய சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

    இந்த மாநாட்டில் முன் னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாநில விவசாய சங்க செய லாளர் மாசிலா மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கணங ணகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி னர்.

    மாநாட்டில் வழக்கறிஞர் மருது, கோபால், முருகேசன், ஆறுமுகம், மாதர் சங்கத்தின் சார்பில் பாண்டியம்மாள், மஞ்சுளா, மாவட்ட விவசாய சங்க செயலாளர் காமராஜ், சகாயம், ராஜா, பாண்டி, ஒன்றியச் செயலாளர் திரு செல்வம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சந்தைத் திட லிலிருந்து மாநாடு திடல் வரை பேரணி நடைபெற்றது. மாநாட்டில், அதிக மக்கள் தொகை உள்ள காளையார் கோவில் ஊராட்சியை தமிழக அரசு பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்,

    தொண்டி-மதுரை ரெயில் பாதையை மத்திய அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×