search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ராஜபாளையத்தில் பெண் சப்ளையருடன் ஓட்டம் பிடித்த சமையல் மாஸ்டர்- போலீசார் விசாரணை
    X

    ராஜபாளையத்தில் பெண் சப்ளையருடன் ஓட்டம் பிடித்த சமையல் மாஸ்டர்- போலீசார் விசாரணை

    • சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.
    • சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் சோனைமுத்து (வயது35). இவர் ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே ஓட்டலில் அழகம்மாள் (22) என்பவர் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சோனைமுத்துவின் மனைவி பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்தார்.

    இருப்பினும் அவர்களது பழக்கம் தொடர்ந்து வந்தது. சம்பவத்தன்று தனது மனைவி பாண்டியம்மாளிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சோனைமுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது கணவர் மாயமானது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சோனை முத்து, அவருடன் பணி புரிந்த அழகம்மாளுடன் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×