search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறாவளி காற்றுடன் கனமழை: 10 மின்கம்பங்கள் சாய்ந்தன- மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு
    X

    சூறாவளி காற்றுடன் கனமழை: 10 மின்கம்பங்கள் சாய்ந்தன- மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு

    • திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்று காரணமாக திருவாலங்காடு அடுத்த மணவூர் கிராமத்தில் சாலையோரம் மற்றும் வீடுகளில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் அந்த பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.

    மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்ற னர், இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,

    Next Story
    ×