search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரைக்கு சுற்றுலா வந்த கர்நாடக பக்தர் மயங்கி விழுந்து பலி
    X

    மதுரைக்கு சுற்றுலா வந்த கர்நாடக பக்தர் மயங்கி விழுந்து பலி

    • சங்கர் குப்பக்கடா சிம்மக்கல் சென்றபோது மயங்கி விழுந்தார்.
    • சங்கர் குப்பக்கடாவை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் பகல் கோர்ட்டை சேர்ந்தவர் சங்கர் குப்பக்கடா (வயது42). இவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிம்மக்கல் சென்றபோது மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி கலாவதி குப்பக்கடா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக பக்தர் மரணத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×