search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கல்லறை தோட்டம் அருகே கொலை: பழிக்கு பழியாக வாலிபரை கொன்ற கும்பல்
    X

    நெல்லை கல்லறை தோட்டம் அருகே கொலை: பழிக்கு பழியாக வாலிபரை கொன்ற கும்பல்

    • கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் அனிதா, மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது கே.டி.சி. நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டு பாளை ராஜகோபாலசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துஹரி (வயது 22) என்பவரை அவரது நண்பர் பிரீதம் என்பவர், சாந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும், அந்த வழக்கில் ஜோஸ் செல்வராஜ், ப்ரீத்தம், செல்வகுமார், சுகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று ஜோஸ் செல்வராஜ் ஆஜராகி விட்டு வரும்போது முத்து ஹரியின் அண்ணன் சந்தோஷ் என்பவர் ஜோஸ் செல்வராஜின் நண்பர்கள் ஆன ப்ரீத்தம் செல்வகுமார், சுகுமார் ஆகியோரிடம் மது வாங்கிக் கொடுத்து ஜோஸ் செல்வராஜை ஜெபக்கூடத்திற்கு பின்புறம் உள்ள அந்த கட்டிடத்திற்கு அழைத்து வந்து மதுவை குடிக்க வைத்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் பழிக்குப் பழியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக ப்ரீத்தம் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×