search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் குளியல் அறையில் மயங்கி விழுந்த வாலிபர் சாவு
    X

    கோவையில் குளியல் அறையில் மயங்கி விழுந்த வாலிபர் சாவு

    • தார்சன் தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
    • தார்சன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர்.

    கோவை,

    கோவை சின்னவே டம்பட்டி அருகே உடயாம்பா ளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (52). இவரது மகன் தார்சன் (வயது 31). இவர் எம்பிஏ முடித்து விட்டு ஆவாரம்பா ளையத்தி ல் உள்ள தனியார் நிறுவன த்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலை யில் வேலையை முடித்து விட்டு அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிப்பத ற்காக சென்றார்.அப்போது குளியல் அறையில் இருந்து திடீரென சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு குழந்தை வேல் குளியல் அறைக்கு சென்று பார்த்த போது, அவரது மகன் சுயநினை வின்றி கீழே விழுந்து மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு கொண்டு சென்ற னர். இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அங்கிருந்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவண ம்பட்டி போலீசா ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×