search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார். தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பசுமை நகரை சேர்ந்தவர் சர்க்கரை மகள் வினோதேவி(33). இவருக்கும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த முரளிகுமார் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே வினோதேவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேனிக்கு வந்து தனது தாய் முருகலெட்சுமி யுடன் தனியாக கொடு விலார்பட்டியில் வசித்து வந்தார்.

    இதனிடையே அவரது கணவர் முரளிகுமார் அவ்வப்போது தேனிக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார். இதனால் அவரது தாயார் முருகலட்சுமியும் இனிமேல் தனது மகள் கணவருடன் சேர்ந்த ஒற்றுமையாக வாழ்வார் என நினைத்து ள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சம்பவத்தன்று வினோதேவியின் அண்ணன் மதன்ராஜா தீபாவளிக்கு ஜவுளி எடுக்க தனது தங்கை குடும்பத்தை அழத்துச்செல்வதற்காக வந்துள்ளார். அப்போது ஒரு அறையில் வினோதேவி தூக்குமாட்டிய நிலையில் இறந்துகிடந்தார்.

    அவரது தாய் முருக லட்சுமி அதிகளவு மாத்திரை களை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக தனது தாயை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது.

    போலீசார் சம்பவ இட த்திற்கு வந்து வினோதேவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு புகார் அளித்தனர்.

    இதுகுறித்து வி.ஏ.ஓ தேவி ஆண்டிபட்டி போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்துகிடந்த ஆண்சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் 45 வயது மதிக்கத்தக்க ஆண்சடலம் என்பதும், அவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு வக்கீல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தேனி:

    தேனி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட கோர்ட்டு முன்பு நாமக்கல் வக்கீல் மணிகண்டன் என்பவரை கொலை செய்த சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், அதுபோல சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வக்கீல்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும்,

    வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வக்கீல்கள் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில், தேனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செல்வன் முன்னிலையில் கோர்ட்டு பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், இளங்குமரன், ,மல்லீஸ்வரன், ஜெயபாரதி, காண்டீபன், பாலமுருகன், பாண்டிமணி, ஹரிஹரசுதன், ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • சின்னமனூரில் பகுதியில் ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
    • மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் 23-வது வார்டு ஊர்க்காவல் தெருவில் வசித்து வரும் முத்தீஸ்வரன் (வயது 40). இவரது மனைவி ஈஸ்வரி (35) இவர்களது வீடு கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் அடைமழை காரணமாக பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுவர் இடிந்து விழுந்தது.

    அப்போது முத்தீஸ்வரன் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது. உடனடியாக இது குறித்து அப்பகுதி வார்டு உறுப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 23 வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள்ராமு, துணைத் தலைவர் முத்து க்குமார் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.

    பின்பு மின்வாரிய அதிகாரிகளுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • சிங்கராஜபுரம் ஊராட்சியில் சாலை தொடர் மழையால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.
    • இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருச நாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சியில் பூசனூத்து, முத்தூத்து, தேக்கிளை குடிசை திருப்பூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஏராள மான ஏக்கர் பரப்பளவில் இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, கத்தரி, பீன்ஸ், அவரைக்காய், மொச்சை, தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளையும் பயிர்களை ஆண்டிபட்டி, தேனி, மதுரை, கம்பம் ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்தநிலையில் இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் வனத்துறையினரின் தடை காரணமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியுற்று வந்தனர்.

    இந்த கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம சபை கூட்டங்க ளில் தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வருசநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த தார் சாலை கனமழையின் காரணமாக அதிக அளவில் சேதமடைந்து போக்கு வரத்திற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    சில இடங்க ளில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இரவு நேரங்களில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதி காரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கிராமங்களுக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.

    தேனி:

    தீபாவளித் திருநாளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதனால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    பட்டாசுகளை வெடிப்ப தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடு வதற்கு பொது மக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார்.

    பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக கொட்டக்குடி, வராக நதி, சுருளியாறு, வரட்டாறு, மஞ்சளாறு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நீர் பெருக்கு வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2310 கன அடியாக உள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது. இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதனால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து வருகிற 10-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி அதற்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 125.85 அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒரே அடி உயர்ந்து 126.85 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 980 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 2605 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4018 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.87 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 412 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 5-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 35.2, தேக்கடி 46, கூடலூர் 21.2, உத்தமபாளையம் 50.4, சண்முகாநதி அணை 16, போடி 21.3, மஞ்சளாறு 10.4, சோத்துப்பாறை 52, வைகை அணை 23.4, பெரியகுளம் 14, வீரபாண்டி 21.8, அரண்மனைப்புதூர் 12.2, ஆண்டிபட்டி 61.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
    • வருகிற 10ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது. வரத்து 980 கன அடியாகவும், திறப்பு 105 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    முல்லைப்பெரியாற்றில் உள்ள லோயர்கேம்ப் குருவனூத்து பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் ஆற்றின் குறுக்கே உள்ள சிறு புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நீர் திறப்பு 500 கன அடிக்கு மேல் அதிகரித்தால் மட்டுமே மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 67.26 அடியாக உள்ளது. வரத்து 2680 கன அடியாகவும், திறப்பு 69 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5147 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் கரையோரப்பகுதியில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் நிலை உள்ளது. வருகிற 10ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணி த்துறை மற்றும் வருவா ய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து மற்றும் திறப்பு 336 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 4-ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும், போடி அணைக்கரை பிள்ளையார் அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால் வராக நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையை கடந்து பொது மக்கள் செல்ல வேண்டாம் என பொது ப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    பெரியாறு 2.8, தேக்கடி 6.8, கூடலூர் 4.2, உத்தம பாளையம் 3.6, சண்முகாநதி அணை 5.4, போடி 8, வைகை அணை 3, மஞ்ச ளாறு 4, சோத்துப்பாறை 18, பெரியகுளம் 8, வீரபாண்டி 12, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    பரமசிவம் கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் குணசேகரன், துப்புரவு அலுவலர் மணிகண்டன், இளநிலை பொறியாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கணேசன், அகமது கபீர் மற்றும் கவுன்சிலர் மகேஸ்வரன் உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது.
    • தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்திற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆண் யானை குட்டி மர்மமாக இறந்து கிடந்ததால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேனி மாவட்டம் சுருளி அருவி, மணலாறு, இரவங்க லாறு, வெண்ணியாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தேக்கடி வனப்பகுதியில் இருந்து மேகமலை வனப்பகுதிக்கு யானைகள் வந்துபோவது அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக கம்பத்திற்கு அரிசி கொம்பன் யானை வந்து சென்றபிறகு இதுபோன்ற யானைகள் நடமாட்டம் அதிகரித்து ள்ளது.

    இந்நிலையில் இரவங்க லாறு அணையின் கரையை யொட்டி ஆண் யானை க்குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறை யினருக்கு தோட்ட தொழி லாளர்கள் தகவல் அளித்தனர்.

    அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது. இதனை யடுத்து கால்நடை பரா மரிப்புத்துறை டாக்டர் தலைமையில் அங்கு வந்த குழுவினர் யானை குட்டியி ன் உடலை பிரேத பரிசோ தனை செய்து அதனை வனப்பகுதியிலேயே புதைத்தனர்.

    யானை குட்டி இறப்பிற்கான தகவல்கள் மாறுபட்ட முறையில் வெளியாகி உள்ளது. வயிற்று வலியால் யானை இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் யானையின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன. தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்தி ற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே யானையின் இறப்பு குறித்து துணை இயக்குனர் ஆனந்த் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி போலீசில் அவரது மனைவி புகார் அளித்தார்.
    • இந்த நிலையில் தேவாரம் ஓவுலாபுரம் பெட்ரோல் பங்க் பகுதியில் அவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் பொன்னையா. (வயது 73). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி போலீசில் அவரது மனைவி பவுன்தாய் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் தேவாரம் ஓவுலாபுரம் பெட்ரோல் பங்க் பகுதியில் பொன்னையா மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை மீட்டு உத்தமபாளைம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னையா உயிரிழந்தார்.

    இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.
    • தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக போடி-மதுரை ரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.

    இதே போல் போடி, கொட்டக்குடி, குரங்கணி, பீச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு நடுரோட்டில் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன மழை காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இவை காண்பதற்கு மிகுந்த ரம்யமாக இருந்தாலும் தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் குரங்கணி போலீசார் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்துக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைச்சாலையில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    ×