search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 700 கனஅடியில் இருந்து அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்தநிலையில் நேற்று மீண்டும் பெய்ய தொடங்கி யது.

    இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1101 கனஅடியாக உயர்ந்தது. நேற்று வரை அணையிலி ருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்பட்டது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. வைகை அணையின்நீர்ம ட்டம் 64.60 அடியாக உள்ளது. 769 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 106 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 9.2, கூடலூர் 16.2, உத்தம பாளையம் 16.6, சண்முகாநதி அணை 18.4, போடி 11.8, வைகைஅணை 3.8, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1, வீரபாண்டி 5, ஆண்டிபட்டி 3.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • மதுகுடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கோம்பை அருகே அமுல்நகரை சேர்ந்த அசோக்குமார்(23). 10-ம் வகுப்பு படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சகோதரி திருமண த்திற்காக ஊருக்கு வந்து ள்ளார்.

    மதுகுடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த அசோக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
    • வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

    இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடமலைக்குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் முட்செடிகளை அகற்றுதல், வைகை ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துதல், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

    முகாமின் இறுதி நாளான நேற்று வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர். கடமலைக்குண்டு கிராமத்தில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழ் ஆசிரியர் செல்வம் தலைமையில் போதை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது.
    • தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. இதன்மூலம் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது. அதனைதொடர்ந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதனையடுத்து அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

    இன்றுமுதல் அடுத்தவருடம் மார்ச் மாதம் 15-ந்தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 45 நாட்களுக்கு 30 கனஅடிநீரும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கனஅடிநீரும், 60 நாட்களுக்கு 25 கனஅடிநீரும் என திறக்கப்பட உள்ளது.

    • ஆண்டிபட்டி பேரூராட்சியில் சில மாதங்களாகவே தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது.
    • உறுப்பினர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்காத தலைவரை மாற்றிவிட்டு வேறு ஒரு தலைவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க உறுப்பினர்கள் 9, அ.தி.மு.க 6, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தலா ஒருவர் உள்ளனர்.

    தலைவராக சந்திரகலா என்பவரும், துணைத்தலைவராக ஜோதிசேகர் என்பவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் வரவில்லை. இதுகுறித்து கவுன்சிலர்கள் சிலர் தெரிவிக்கையில், பேரூராட்சியில் தங்கள் வார்டுக்குட்பட்ட பிரச்சினைகளை தலைவரிடம் தெரிவித்தாலும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    பெயருக்காக கூட்டம் நடத்தி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. உறுப்பினர்களின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்காத தலைவரை மாற்றிவிட்டு வேறு ஒரு தலைவரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்காக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்க உள்ளோம் என்றனர்.

    மேலும் தாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக மக்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவை செயல்அலுவலரிடம் வழங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியினர் இறங்கியுள்ளனர்.

    • சின்னமனூர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை மகள் தரணி(19). இவர் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் அவரது தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தரணியை தேடி வருகின்றனர்.

    தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் அட்டை வியாபாரம் செய்து வருகிறார். இதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த கேதர்சுமார்(35) என்பவர் கடந்த 3 வருடங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • தேனி மாவட்டத்தில் கட்டிடம், கட்டுமான பணிகள் பதிவு செய்வது அவசியம் என கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் அரசு சார்பாக நேரடியாகவோ அல்லது ஒப்பந்ததாரர்களை கொண்டோ நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், தனியார் கட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர்கள் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்களும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்திருந்தால் மட்டுமே அங்கு பணிபுரியும் கட்டிடத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் நேரடியாக கண்காணித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

    மேலும், அவர்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும். கட்டுமானப் பணியிடத்தில் ஒரு தொழிலாளி விபத்து ஏற்பட்டு இறக்க நேரிட்டால், அத்தொழிலாளியின் குடும்பத்திற்கு இச்சட்டத்தின்படி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலமாக ரூ.5,00,000 இழப்பீடு வழங்கப்படும். மேலும் பணிபுரியும் கட்டுமானப் பணியிடத்தில் தொழிலாளிக்கு விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அவ்விபத்தின் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஊனங்களின் வீரியத்தைப் பொறுத்து ரூ.1,00,000 இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கட்டுமானப் பணியிடத்தில் பணிபுரியும் அனைத்து பிற மாநில தொழிலாளர்களையும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதன் மூலமாக அத்தொழிலாளர்களுக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்படும். ஆகவே தேனி மாவட்டத்தில் நடைபெறும் தனியார் கட்டிடம் மற்றும் இதரகட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் அரசு சார்ந்தகட்டுமானப் பணியிடங்கள் அனைத்தும் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய துணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், நேருஜி நகர், திண்டுக்கல். (திண்டுக்கல், தேனி, கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது) என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • 71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகர குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதி, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்தது.

    71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 781 கனஅடிநீர் வருகிறது. 69 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    66 அடியை எட்டும் போது கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 68.50 அடியில் 2-ம் கட்டமும், 69 அடியாக உயர்ந்தபின்னர் 3-ம் மற்றும் இறுதி கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும்.

    மழை தொடரும் பட்சத்தில் வைகை அணை நீர்மட்டம் விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகமாக விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.85 அடியாக உள்ளது. 593 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 73 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 1.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 2, போடி 0.4, வீரபாண்டி 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வைகை அணை 3.6, வீரபாண்டி 3, ஆண்டிபட்டி 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • சிறுவன் மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகில் உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் நித்தின்(5). இச்சிறுவனுக்கு சம்பவத்தன்று மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.

    உடனடியாக பெற்றோர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். ஆனால் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வருகிற 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ. டிப்ளமோ, நர்சிங் டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர தகுதி உடைய அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
    • குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    போடி:

    தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமாரின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் மன்னவனூர் அரசுமேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் பழனிமுருகன் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.

    இது குறித்து ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கூறியதாவது:-

    தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக அழநாட்டை பல சிறு சிறு நாடுகளாகப் பிரித்தனர். அதன்படி மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியான இன்றைய வருசநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

    இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி, பெருங் கற்கால கல்லறைகள், பழைய புதிய கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கி.பி.13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் (கி.பி. 1297) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று வருசநாடு தங்கம்மாள்புரம் பொட்டியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்டது.

    இதில் குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    இந்த கல்வெட்டு முழுமையாக கிடைக்கப்பெறாததால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இருப்பினும் பாண்டிய மன்னன் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது. வரத்து 781 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4426 மி.கன அடி.

    மழை நீடிக்கும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.90 அடியாக உள்ளது. வரத்து 710 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3400 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடி. வரத்து 33 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 383 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 97 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு 1.6, தேக்கடி 2.2, உத்தமபாளையம் 2.4, போடி 2.6, வைகை அணை 16.8, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 21, வீரபாண்டி 9.2, அரண்மனைப்புதூர் 10.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×