search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி. எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

    இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் தொடங்கியது.

    நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 51 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 4 விக்கெட்டும், ஆண்டனி தாஸ், அதிசயராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வசீம் அகமது 27 ரன்னிலும் ராஜ்குமார் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நிதானமாக விளையாடிய ஷியாம் சுந்தர் 31 ரன்னிலும் ஜபார் ஜமால் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ரவி ராஜ்குமார் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி திருச்சி அணியை வெற்றி பெற வைத்தார்.

    சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய திருச்சி அணி வீரர் சரவண குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நெல்லை அணி 177 ரன்களை சேர்த்தது.

    நெல்லை:

    8-வது டி.என்.பி. எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

    முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இன்றைய ஆட்டத்தில் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 51 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

    திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 4 விக்கெட்டும், ஆண்டனி தாஸ், அதிசயராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் கடந்த 13-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 8 போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    இதுவரை 17 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 8 புள்ளியுடனும், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 புள்ளியுடனும், நெல்லை ராயல் கிங்ஸ் 5 புள்ளியுடனும் முதல் 3 இடங்களில் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளிகளுடனும், மதுரை பாந்தர்ஸ் 3 புள்ளியுடனும், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 2 புள்ளிகளுடனும் உள்ளன.

    டி.என்.பி.எல். போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் இன்று தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை அங்கு 6 போட்டிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லை இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை-திருச்சி அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த அணி வெற்றி பெற்றால் 7 புள்ளியுடன் முன்னேறும். திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.

    • தலைவர்களை கொலை செய்து விட்டு பெயர் வாங்கி விடலாம் என்பதை தவிர எதிரிகள் என்ற எண்ணத்தில் இல்லை.
    • இவரை செய்து விட்டோம் என பெயர் வாங்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ஜான் பாண்டியன் இன்று திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் (கொலை செய்தவர்கள்) தலைவர்களை கொலை செய்து விட்டு பெயர் வாங்கி விடலாம் என்பதை தவிர எதிரிகள் என்ற எண்ணத்தில் இல்லை. இந்த நிலைமைதான் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.

    இவரை செய்து விட்டோம் என பெயர் வாங்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கண்காணித்து தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனக்கு மிரட்டல் இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளேன். தற்போதும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். உளவுத்துறை பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்னிடம் தெரிவிக்கவில்லை. அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

    திரும்ப பெறப்பட்ட போலீஸ் பாதுகாப்பை எனக்கு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் என் உயிருக்கு தற்போதும் ஆபத்து உள்ளது. சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உயிருக்கும் ஆபத்து உள்ளது.

    வேலைவாய்ப்பு இல்லாததும், கஞ்சாவும்தான் கூலிப்படைக்கு காரணம். தமிழகத்தில் நடைபெறும் கொலைகளுக்கு அதிகாரிகளும் உடந்தை.

    இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊர் பொதுமக்கள் பெயரில் பேனர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டில் சுமார் 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    இந்நிலையில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் பாம்பே பர்மா நிறுவனத்தின் குத்தகை காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தேயிலை தோட்டத்தை மூடப்போவதாக தொழிலாளர்களிடம் தெரிவித்தது.

    அதன் பின்னர் தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றதாகவும், அங்கு வசிக்கும் மக்களையும் வெளியேற உத்தரவிட்டதாகவும் தொழிலாளர்கள் புகார் கூறினர்.

    இந்த சம்பவங்களை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், குத்தகை காலம் முடிவடையும் வரை மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து மறு உத்தரவு வரும்வரை தொழிலாளர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி கொள்ள தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இதற்கிடையே தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊர் பொதுமக்கள் பெயரில் பேனர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசுக்கு வைக்கும் வாழ்வாதார கோரிக்கைகள் என்ற தலைப்பில் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

    அதில், மாஞ்சோலை எஸ்டேட்டுகளை அரசு எடுத்து நடத்த வேண்டும், 10 ஏக்கர் வீதம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாஞ்சோலையில் நிலம் வழங்க வேண்டும், தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் மழை பெய்யவில்லை.
    • சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று 5 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து மலைப்பகுதியில் மழை குறைய தொடங்கியது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு 2318 அடியாக குறைந்தது.

    நேற்று அணை நீர்மட்டம் 110.85 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 112.80 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளது. மணி முத்தாறு அணை நீர் இருப்பு 73 அடியில் நீடிக்கிறது. இன்று காலை வரை பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 7 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் அடித்தது. களக்காடு மலையடிவார பகுதிகளில் பெய்த மழையால் தலையணையில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் விட்டு விட்டு பெய்கிறது. ராதாபுரம், வள்ளியூர், பணகுடி பகுதிகளில் நேற்று இரவில் சிறிது நேரம் சாரல் அடித்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷண நிலை இருப்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    கடையம் அருகே அமைந்துள்ள ராமநதி அணை தனது முழு கொள்ளளவான 84 அடியில் 82 அடியை எட்டிவிட்டதால் பாதுகாப்பு கருதி நேற்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த அணைக்கு வினாடிக்கு 110 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 88 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை வரை அந்த அணையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா அணை பகுதியில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 601 கனஅடி நீர் தண்ணீர் வந்ததால், இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து அந்த அணை நீர்மட்டம் 69.30 அடியை எட்டியுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி அதிகரித்து 109.50 அடியை எட்டியுள்ளது. மழை குறைந்துவிட்டாலும் மாவட்டங்களில் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தில் தென்காசியில் 3.2 மில்லிட்டரும், செங்கோட்டையில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. குண்டாறு அணை பகுதியில் அதிகபட்ச மாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    • மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
    • ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அமைந்துள்ளது. இன்று காலை சிலை முன்பு திடீரென கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் கையில் மதுவை ஒழிப்போம் என்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு பதாகை ஒன்றை ஏந்தி முட்டி போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்திய போது மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் நெல்லை மாவட்டம் குறிச்சிக்குளம் பகுதியை சேர்ந்த யோவான் என்பதும், இவர் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் பணி புரிவதும் தெரியவந்துள்ளது.

    மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

    • மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று தொடங்கி இன்று காலை வரையிலும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று காலை வரை 44 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 4 ½ அடி உயர்ந்து 110.80 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 129.20 அடியாகவும் உள்ளது.

    இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக மாவட்டத்தின் 7 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் நீர் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த கால்வாய் வரத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த அணை பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பரவலாக பெய்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது. கன்னடியன் பகுதியில் 6.4 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 5.6 மில்லிமீட்டரும், களக்காட்டில் 6.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாங்குநேரியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணையில் சுமார் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணை நிரம்பி ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் நேற்று கூடுதல் தண்ணீர் வெளியேறியது.

    கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் அந்த அணையின் நீர் இருப்பு 4 ½ அடி உயர்ந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது.

    அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் விவசாய பணிகளும் தீவிரம் அடைந்து வருகிறது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள தென்காசியில் 15 மில்லிமீட்டரும், சிவகிரியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டையில் 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் தமிழக -கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரியங்காவு பாலருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

    • இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 75).

    இவரது 4 மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆபிரகாம் இறந்துவிட்டதால் பொன்னம்மாள் மட்டும் சொந்த ஊரில் தனியாக வசித்து வந்தார்.

    சமீபத்தில் அவருக்கு துணையாக மருமகள் மற்றும் பேரன் சொந்த ஊருக்கு வந்து தங்கி உள்ளனர். கடந்த 11-ந்தேதி மாலையில் காருக்குறிச்சி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற பொன்னம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து சேரன்மகா தேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னம்மாளை கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் 2 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரையும் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் இடப் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த கொலையை அந்த 2 பேர் மட்டும்தான் செய்தார்களா? அல்லது கூட்டாளிகள் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து 2 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சில இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. களக்காடு பகுதியில் 2.8 மில்லிமீட்டரும், கன்னடியன் பகுதியில் 1.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளிலும் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று பகலில் சுமார் 350 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் இன்று காலை 2649 கனஅடி நீர் வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 102 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று காலை 104.10 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 113 அடியாக இருந்த நிலையில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 2 அடி அதிகரித்து 40 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடையம் அருகே உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 11 மில்லிமீட்டரும், கடனா அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேலும் அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லிமீட்டரும், குண்டாறில் 31 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 76 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 55.30 அடியாகவும், கருப்பாநதி அணை 47.73 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையில் 95.75 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி நகர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே நகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று மாநகர பகுதியில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததோடு ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாநகர பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. கீழ அரசடி பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • பல ரெயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன் கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    நெல்லை:

    சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் இன்டர்லாக் சிக்னல் பணிகள் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் பல ரெயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் (வண்டி எண் 20683 / 20684) தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ரெயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன் கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அதேபோல் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டுடன் நின்று விடும். அவை தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு செல்லாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முருகன் என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.
    • மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை, சீவலப்பேரி ரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டேனியல் சுந்தர் (வயது 35) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்ட சுண்டக்குறிச்சி மேல தெருவை சேர்ந்த முருகன் (29) என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.

    அதன்பேரில் டேனியல் சுந்தர், முருகனுடைய வீட்டில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளை இறக்கி விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது முருகன் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பணத்தை கூகுல்-பே மூலம் அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து டேனியல் சுந்தர் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் எதுவும் நிறுவனத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதில், சென்னை, கொராட்டூர், பாலாஜி நகர், காமக்குடி தெருவை சேர்ந்த விக்னேஷ் (30), திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பைசூர் ரகுமான் (34) ஆகிய இருவரும் டேனியல் சுந்தரிடம், முருகன் போல பேசி கட்டுமான பொருட்களை வாங்கியதும், முருகனிடம், டேனியல் சுந்தர் பேசுவதாக கூறி பொருட் களுக்குரிய பணத்தை கூகுள்-பே மூலம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து விக்னேஷ், பைசூர் ரகுமான் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ×