search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது
    • அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.

    இந்த நிலையில் திருப்பத்தூர்- காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே மொலகாரம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    இதனால் மொல காரம்பட்டி - குனிச்சி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்க ப்பட்டது. தண்டவாளத்தை கடந்து செல்லும் மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கி நிற்பதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அலட்சியமாக ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

    தண்டவாளத்தை கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • புதிய பைப் லைன் அமைக்கப்பட்டது
    • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    இம்மலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ஏலகிரி மலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமம் மோட்டு காடு வட்டத்தில் வசித்து வரும் குடும்பங்கள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ ஸ்ரீ கிரிவேலன் தொடங்கி வைத்தார்.

    அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பொருட்கள் எரிந்து நாசமானது
    • 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் லியோ பிரான்ஸ் ( வயது 58). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார்.

    அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மர கடை மற்றும் மரப்பட்டறை குடோன் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மரக் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள், தீப்பிடித்து எறிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறை மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். சற்று நேரத்தில் கடையில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியதால் அந்தப் பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.

    தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    மேலும் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் மர குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.

    சம்பவம் நடந்த இடத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்று கட்சியினர் 300 பேர் இணைந்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஓ.பி.எஸ். அணியின் சார்பில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மாற்று கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் இணையும் விழா நகர செயலாளர் கோபிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    நகர அவைத்தலைவர் சஜாத் உசேன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கோ.சுரேஷ் பாபு கலந்து கொண்டு பேசினார்.

    மேலும் நிகழ்ச்சி முடிவில் இ.பி.ஸ். அணி, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சினர் சுமார் 300 பேர் தங்களை ஒ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டனர்.

    அவர்களை மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு சால்வைகள் அணிவித்து வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், நகர பொருளாளர் எம்.பிரகாஷ் ,நகர இணைச் செயலாளர் ராபியகவுஸ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், சலீம், சரிதாபாஸ்கர், சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் ஆதில் அஹமத், அவைத்தலைவர் அத்தாவுள்ளா, துணை செயலாளர் நசீர் அகமது, இணைச் செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் நஸ்ருல்லா, பாசரை நகர செயலாளர் பயாஸ் அகமத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை
    • வாகனங்களை கலெக்டர் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ள மாணவர்களை 1 நாள் சுற்றுலாவாக ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டது.

    அதன்படி இன்று காலை சுற்றுலா சென்ற வாகனங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • போலீசார் ரோந்து
    • மது பாக்கெட்கள் பறிமுதல்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் போலீசார் முருகன் சினிமா தியேட்டர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அனுமதியின்றி கள்ளத்தனமாக கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் பாவடை தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மது பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    தி.மு.க. நகர செயலாளர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், நகர மன்ற துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன், நகர அவைத் தலைவர் இரா. மகேந்திரன், நகரத் துணைச் செயலாளர் ஆ. சுரேஷ், மாவட்ட பிரதிநிதி பு. பாஸ்கர் நகர பொருளாளர் த. இனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஜோலார்பேட்டை சுற்று பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதன செய்து கொண்டனர்.

    இதில் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் துரைமுருகன் முகாமை தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் தி.மு.க. மாணவரணி சார்பில் 3 நாள் கருத்தியல் பயிலரங்க கூட்டம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    இந்த பயிலரங்க கூட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் தலைமை தாங்கினார். மாணவரணி மாநில நிர்வாகிகள் இரா. ராஜீவ் காந்தி, சி. ஜெரால்டு, எஸ். மோகன், த. சோழராஜன், ரா. தமிழரசன், பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி. எம். ஆனந்த், கா. பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டி கலந்துக்கொண்டு, அவரது வழிகாட்டுதலோடு, வாலாசா வல்லவன், பொள்ளாச்சி மா. உமாபதி, மதிவதனி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    நிறைவு நாளான நேற்று நடந்த கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திருவண்ணாமலை சி. என்.அண்ணாதுரை எம்.பி., திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் சடலமாக மீட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 35), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி அனிதா(32) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இவர் கூலி வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றார். அங்கு சந்திரசேகருக்கு ஆந்திர மாநிலம், ஆவலங்குப்பம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி பூஜா (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், கள்ளத்தொடர்பாக மாறி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சந்திரசேகர், பூஜாவை தனியாக வாணியம்பாடிக்கு அழைத்து வந்தார். வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதனை அறிந்த பூஜாவின் உறவினர்கள் இன்று காலை வாணியம்பாடி வந்தனர். வாணியம்பாடி தேங்காய்பட்டரை பகுதியில் சந்திரசேகருடன் தங்கியிருந்த பூஜாவை காரில் அவரது உறவினர்கள் அழைத்து செல்ல முயன்றனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது காரின் கண்ணாடி உடைத்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

    அப்போது ஆத்திரமடைந்த சந்திரசேகர் ஓடிச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார். இதனைப் பார்த்த பூஜாவும் மற்றொரு விவசாய கிணற்றில் ஓடிப்போய் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பொதுமக்கள் பிணமாக மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்தது
    • காசோலையை கர்நாடக அரசு வருவாய் துறை அலுவலர்கள் வழங்கினர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்(23)நித்திஷ்( 22), ராஜேஷ்(19), தினேஷ்(18) ஆகிய 4 பேர் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் கூலி வேலைக்கு சென்றனர்.

    கடந்த 7-ந் தேதி பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு இவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கியது. இதனை அடுத்து கர்நாடக அரசு வழங்கிய இந்த நிவாரண நிதிக்கான காசோலையை கர்நாடக அரசு வருவாய் துறை அலுவலர்கள் நேற்று வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்துக்கு நேரில் வந்து வாணியம்பாடி தாசில்தார் மோகன் முன்னிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் பெற்றோர்களிடம் தலா ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினர்.

    • அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என சோதனை
    • அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் 300 -க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலை யில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று அரசு மருத்து வமனைக்கு சென்றார். அப்போது டாக்டர்கள் செவிலி யர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் பணியில் சரியாக பணியாற்றி வருகின்றனரா என ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு நோயாளிகளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அனைத்தும் போதுமானதாக இருப்பு உள்ளதா எனவும் தமிழக அரசு வழங்கும் நிதி அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா எனவும் ஸ்கேன் மையத்தையும் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் மருத்துவ மனை மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மட்டுமின்றி மருத்துவமனை முழுவதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.

    ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது பிடிபட்டது
    • ஏலகிரி மலை காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த ராஜிவ் என்பவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

    அதேபோல் பொன்னேரியிலிருந்து ஏலகிரி மலை நோக்கி செல்லும் சாலையில் சின்ன பொன்னேரி பகுதியில் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 14 அடி நீளமுள்ள பிடித்து ஏலகிரி மலை காட்டில் விட்டனர்.

    ×