search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிணற்றில் மோட்டார் திருடிய 3 பேர் கைது
    X

    கிணற்றில் மோட்டார் திருடிய 3 பேர் கைது

    • வாகன தணிக்கையில் சிக்கினர்
    • பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை

    ஆலங்காயம்:

    ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு கூவல் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது நிலத்தில் உள்ள கிணற்றில் மாட்டியிருந்த நீர்மூழ்கி மோட்டார் திருட்டு போய்விட்டதாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் வாணியம்பாடி - ஆலங்காயம் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 21), குபேந்திரன் (19), பாலாஜி (21) என்பதும், கூவல் குட்டை பகுதியில் மின்மோட்டார் திருடியதும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×