என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- டெனிகாயிட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றனர்
- மலர்கள் தூவி மாலை அணிவித்தனர்
ஆலங்காயம்:
தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிட்டோரியா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி வரை 5 வது வலைப்பந்து (டெனிகாயிட்) உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் இந்திய அணிக்காக 18 பேர் உட்பட 9 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பா டியை சேர்ந்த பயிற்சியாளர் முரளி தலைமையில் கல்லூரி மாணவர்கள் சுகிவர்மன், அபினேஷ் மற்றும் அஞ்சலக ஊழியர் அறிவழகன் ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.
இறுதிப் போட்டியில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் கல்லூரி மாணவர் சுகிவர்மன் ஜூனியர் இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும், ஜூனியர் அணி பிரிவில் ஒரு தங்க பதக்கம் என 2 தங்க பதக்கங்களை வென்றார்.
அபினேஷ் மற்றும் அறிவழகன் ஆகியோர் சீனியர் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய பயிற்சியாளர் முரளி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சொந்த ஊரான வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாயிட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசி யேஷன் நிர்வாகிகள், கிராம மக்கள், பெற்றோர்கள் மலர்கள் தூவியும் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- குடும்ப பிரச்சினையில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33), கட்டிட மேஸ்திரி.
இவரது மனைவி மஞ்சு (28). தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த பாண்டியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அதிர்ச்சி
- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், அரிசி வியாபாரி. இவர் தனது பைக்கில் சி.என்.ஏ. சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் எடுத்தார்.
அந்த பணத்தை தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார். ஆற்றுமேடு பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
- பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் குறவன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகள் சந்தியா.
இந்த நிலையில் சந்தியாவை நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வைத்து டாக்டராக்குவதற்கு சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் சார்லஸ் டெய்லி, அமுது டெய்லி, மோனிகா, மார்க்டெய்லி ஆகிய 4 பேர் ரமேஷ் மற்றும் கல்பனாவிடம் ஆசை வார்த்தை கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரிடம் கூகுள் பே மற்றும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாக வும் சுமார் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளனர்.
அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு டாக்டர் சீட்டு வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்து உள்ளனர்.
மேலும் நிலுவையில் உள்ள சுமார் 15 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டனர்.
இதுகுறித்து கல்பனா நேற்று 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- அன்னதானமும் வழங்கப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் 3-வது சனிக்கிழமை முன்னிட்டு மூலவருக்கு மஞ்சள் , குங்குமம், பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வெங்கடேச பெருமாளுக்கு மலர் மாலைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கோவில் கோபுரத்தின் மீது விளக்கு ஏற்றப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
- முன் விரோதத்தால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு ஊமையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதிமாறன் மனைவி அம்பிகா (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (50) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நடந்த 5-ந் தேதி குமார் (50) மற்றும் நந்தகுமார் (24) ஆகியோர் இடம் சம்மந்தமாக அம்பிகாவிடன் தகராறு செய்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும் அம்பிகாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அம்பிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சாணங்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதி உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் அந்த பகுதியில் வசிக்கும் வசந்தராஜ் (வயது 50) என்பவரை திடீரென சரமாரியாக தாக்கியது.
இதில் வரதராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20 பாக்கெட்டுகள் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கியது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது புது ஓட்டல் தெரு அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது புது ஓட்டல் தெரு சமத் சாய்பு தெருவைச் சேர்ந்தவர் சமியுல்லா (வயது 44) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தபோது அவரை பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பலாத்கார வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதால் நடவடிக்கை
- டி.ஐ.ஜி. உத்தரவு
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 4-ந் தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் ரெயில் முன்பு பாய்ந்தது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 4-ந்தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மருத்துவ சிகிச்சை அளித்தனர்
- பயனாளிகளுக்கு ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு ஊனம் தடுப்பு முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தொழுநோய் மருத்துவ துணை இயக்குநர் பிரீத்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் தொழுநோய் பாதிப்புக்குள்ளான வர்களை பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
பயனாளிகளுக்கு ஊனம் ஏற்படாமல் இருக்க எம். சி.ஆர் காலணிகள், ஊன்றுகோல் உள்ளிட்ட ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த முகாமின் போது தொழுநோய் மருத்துவ அலுவலர் வெற்றிச் செல்வி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிக்குட்பட்ட நியூடவுன், அம்பூர்பேட்டை, பெருமாள்பேட்டை, ஆசிரியர் நகர், கொல்லதெரு உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல். ஏ .கோவி.சம்பத்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.வி குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், நகர துணை செயலாளர கோவிந்தன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைத் தலைவர் பி.கே.எம் சந்தோஷ், சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்