search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி
    X

    பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி

    • போலீசார் விசாரணை
    • வேலை சம்பந்தமாக சென்றபோது பரிதாபம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35). தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் வேலை சம்பந்தமாக நேற்று இரவு ரஞ்சித் குமார் தனது பைக்கில் ஆம்பூர் பேரணாம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×