search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின்சார வாரிய ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
    X

    மின்சார வாரிய ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

    • கதவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 55). இவர் செய்யாறு பகுதியில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி அமுதா(46). இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்காக செய்யாறுக்கு சென்று விட்டார். வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    காலையில் அமுதா எழுந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×