search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கிணற்றில் விழுந்த சிறுவன் பிணமாக மீட்பு
    X

    சிறுவன் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்ட காட்சி.

    கிணற்றில் விழுந்த சிறுவன் பிணமாக மீட்பு

    • 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த தேசூர் அருகே உள்ள சாத்தம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.கூலி தொழிலாளி. மனைவி தீபா, மகன் விஷ்வா (வயது 7). மகள் காவியா (5).

    ஏழுமலை மனைவியுடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களுடன் விஷ்வா, காவியா சென்றிருந்தனர். அந்த விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே அமர்ந்து சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் தீபா மாடுகளை கட்டிவிட்டு திரும்பிப் பார்த்தபோது விஷ்வாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவியாவிடம் விஷ்வா எங்கே என்று கேட்டார்.

    விஷ்வா கிணற்றின் அருகே சென்றதாக காவியா கூறினார். இதனால் பெற்றோர் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். அப்போது விஷ்வா கிணற்றில் விழுந்தது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து தெள்ளார் தீயணை ப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி விஷ்வாவை பிணமாக மீட்டனர்.

    உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×