search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா?
    • முன்னதாக எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா ஆறாவது நாள் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர், டிவி புகழ் அகடவிகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலே என்ற தலைப்பில் அன்னலெட்சுமி, பிரபாகரன், வர்ணனி ஆகியோரும், ஆன்மீகம் பெரிதும் பெருகியது புறத்திலே என்ற தலைப்பில் டிவி புகழ் பழனி, தமிழாசிரியர் சாகுல் ஹமீது, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார்.

    எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் முனைவர் துரை ராயப்பன், ஆலோசகர் மருத்துவர் பாண்டியன், சர்வாலய உழவாரப்பணி குழுவை சேர்ந்த பாபு என்ற குமரவேல், முருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் ஊழியர் ராஜ்மோகன், நிசாந்த், அண்ணா துரை, மணி, மணிவண்ணன், குருக்கள் ஹரிஹரன், வினோத், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    வருகிற அக் 24 ஆம் தேதி வரை அணைத்து நிகழ்ச்சிகளையும் சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி விழாக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

    • ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.
    • நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ெதாடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

    பின்னர் உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தனர்.
    • வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

    மன்னார்குடி:

    சிவகாசி உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் நேர்ந்த வெடி விபத்துக்களில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அனிதா ரோஸ்லின் மேரி வருவாய் கோட்டாசியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அதிகாரிகள் மன்னார்குடி திருமக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை நேரில் ஆய்வு செய்தனர்.

    அப்போது வெடியின் தரம், ஆபத்துகால முன்னெச்சரிக்கை பணிகள்,வெடியில் சேர்க்கப்படும் மூல பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். மன்னார்குடி வட்டசியர் கார்த்திகேயன் தீயனைப்பு துறை அதிகாரி சீனிவாசன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தேஷனாமூர்த்தி வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    கடந்த சில நாட்களில் தமிழகத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோன்களில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிர் இழந்தனர். இதையடுத்து பட்டாசு தயாரிக்கும் இடங்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, வலங்கைமான் பகுதியில் உள்ள 12 நாட்டு வெடிகள் உற்பத்தி கடைகள் மற்றும் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 48 பட்டாசு கடைகள் மற்றும் அக்ரஹாரம், உப்புக்கார தெரு, கீழத்தெரு, வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதிக்கப்பட்ட சட்ட விதிகளின் படி உரிய ஆவணங்களுடன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா? பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா? உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    சோதனையில் விதி முறைகளை மீறி பல லட்சம் மதிப்பு வெடி பொருட்கள், பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், அனுமதி க்கப்பட்ட அளவை விட அதிக அளவு வெடிபொருட்கள் வைத்திருந்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது.
    • தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து நடப்பாண்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்ட த்தினை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் மல்லிகா, பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவனச்செ யலாளர் செந்தில்குமார் முன்னிலையில், கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்றை வழங்கி தொடங்கி வைத்தார் .

    இதுகுறித்து கவிதா பாண்டியன் கூறும்போது கஜா புயலின்போது நகரத்திலிருந்த பெரும்பாலான மரங்கள் விழுந்து விட்டது. இதனால் தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் காற்று மாசுவை குறைத்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், நகரை பசுமையாக்கவும், காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக மாற்றும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

    இதில் நிழல் தரும் மரங்களான புங்கன், வேம்பு, சரக் கொன்றை, இலுப்பை மற்றும் பூங்காக்களில் முள் இல்லா மூங்கில் போன்ற மரங்கள் நடப்படும், இப்பணியில் தன்னார்வலர்கள், சேவை அமைப்புகள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
    • குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் நேற்று பதவி ஏற்றார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம், விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நடப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

    பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்க 9363495720 இந்த தொலைபேசியின் மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் புகார் தெரிவிப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்தார்.

    • பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சர்வாலய அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரைராயப்பன், ஆலோசகர் எடையூர் மணிமாறன், தமிழ் பால் சிவக்குமார், ராகவா ஜுவல்லர்ஸ் பாலாஜி,பாபு (எ) குமரவேல், கோவில் ஊழியர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் ஓம் சிவாலய நாட்டிய வித்யாலயம் குரு ஸ்ரீ நடன கலையரசன் காரக் கோட்டை மதியழகன் நட்டுவனர் குழுவினர் 40-க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு நடத்திய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு க்களித்தனர். அக்டோபர் 24 வரை தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழு மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

    • பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • திருவாரூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் மதியழகன் புகார் அளித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிருஷ்ணகோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (65). இவர் தனது சகோதரர் மாசிலாமணி என்பவரிடமிருந்து தான செட்டில்மெண்ட் அடிப்படையில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார்.

    இதற்காக பட்டா மாறுதல் கோரி பெருமாளகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதா (42) என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா ரூ 6000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சமாக பணம் கொடுக்க மதியழகன் விரும்பவில்லை. அதனால் கிராம நிர்வாக அலுவலர் சுதா லஞ்சம் கேட்டது குறித்து திருவாரூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் மதியழகன் புகார் அளித்துள்ளார்.

    புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆலோசனைப்படி ரசாயனம் தடவி வழங்கப்பட்ட பணத்தை மதியழகன் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கியுள்ளார். அப்போது துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் கூடியிருந்த லட்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை மதியழகன் கொடுக்கும்போது கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் சுதாவை பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட விவகாரம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மின் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும்.
    • முன்னோட்ட நடவடிக்கையாக அதிவேக பரிசோதனை ரெயில் இயக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி- காரைக்குடி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நேற்று காலை நடந்தது.

    இந்த ரெயிலானது திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டு க்கோட்டை, அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு சோதனை ஓட்டமாக 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்க ப்பட்டது.

    இந்த அதிவேக ரெயில் சோதனை ஓ.எம்.எஸ் என்ற கருவி மூலம் அளக்க ப்பட்டு எங்கெல்லாம் அதிர்வு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து தடம் சீரமைக்கப்பட்டு பயணிகள் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    இதன்படி மின் மயமாக்கு வதற்கு தேவையான நடவடி க்கைகளை ரெயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும்.

    இதன் முன்னோட்ட நடவடி க்கையாக அதிவேக பரிசோ தனை ரெயில் இயக்கப்பட்டது.

    இந்த ரெயிலுக்கு திருத்துறைப்பூண்டி ரெயில் உபயோ கிப்பாளர் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் துரை ராயப்பன், அரசு வக்கீல் பாஸ்கர், செயலாளர் எடையூர் மணிமாறன், உதவி கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.
    • சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் சென்றது.

    திருத்துறைப்பூண்டி,:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- நாகப்பட்டினம் மாவட்டம், அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றது.

    இதனை அடுத்து அகஸ்தியம்பள்ளியில் இருந்து வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குறவப்புலம், கரியாபட்டினம் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்த பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.

    சனி, ஞாயிற்று கிழமைகளை தவிர, மற்ற 5 நாட்களிலும் இந்த ரெயில் சேவை காலை, மாலை என 2 வேளைகளில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் பாதையின் தண்டவா ளத்தின் உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் ஓ.எம்.எஸ் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது.

    முன்னதாக காலை 10.45 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.

    சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் சென்ற ரெயில் காலை 11.15 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடைந்தது. இந்த ரெயிலில் ரெயில்வே அதிகாரிகள் பலர் பயணம் செய்தனர்.

    • விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.
    • மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    திருவாரூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அந்த காவிரிநீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்து, அங்கிருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.

    இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள தோலி, உதயமார்த்தாண்டபுரம், வடசங்கந்தி, இடையூறு, குன்னலூர், பாண்டி போன்ற பகுதிக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதனால் விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தடைபட்டு உள்ளது பல போராட்டங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களில், பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில், வயல்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதாலும், பயிர்கள் சாய்ந்ததாலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கொலு கண்காட்சியை பார்வையிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி விழா வெகு விமரிசயைாக தொடங்கியது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரை ராயப்பன், கோவில் ஊழியர் ராஜ்மோகன், டாக்டர் பாண்டியன், ஓய்வு பெற்ற தலைமையாசியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல் நாள் நிகழ்வில் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் மகன்கள் பூர்ணசந்திரன், தமிழிசை வேந்தன், காளிதாஸ் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், தவிலிசை கலைஞர்களான ஆதிரெங்கம் தவிலிசை மாமுரசு பாலசங்கர், தவிலிசை இளவரசு, ஜெகதீஷ் ஆகியோரின் தவிலிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    முன்னதாக நவராத்திரி விழாவை முன்னிட்டு நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து கொலுவை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழுவினர் செய்துள்ளனர்.

    ×