search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்.
    • பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் சென்ற 6 பேரையும் கடித்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மாவட்டக்குடி, ஆலாத்தூர், விக்கிரபாண்டியம், பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாடம் வேலைக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் நெருஞ்சினக்குடி சாலைவழியாக தான் கோட்டூருக்கு செல்ல வேண்டும்

    இந்த நிலையில் நேற்று பெரியகுடியைச் சேர்ந்த காவியா (வயது17) வர்ஷா (19), சேந்தமங்கலத்தை சேர்ந்த சிவகுமார் (40), நெருஞ்சினங்குடியை சேர்ந்த துரையப்பன் உள்பட 6 பேர், நெருஞ்சனக்குடி சாலை வழியாக கோட்டூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சாலையோரத்தில் இருந்த பனை மரங்களில் கூடுக்கட்டியிருந்த கதண்டுகள் சாலையில் நடந்து சென்ற 6 பேரையும் கடித்தது.

    இதில் படுகாயம் அடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து இருள் நீக்கி ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த தகவலின் பெயரில் கோட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பனை மரங்களில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை அழித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வேறு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    நீடாமங்கலம்:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கான தண்ணீரை விடுவிக்க வேண்டும், தண்ணீரின்றி கருகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் வலங்கைமானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட நிர்வாகக்குழு ராஜா கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய பொருளாளர் மருதையன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தேவிகா மற்றும் உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தென்பரை அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை அரசு உயர்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ராசாத்தி தலைமை தாங்கினார். கோட்டூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாநில சதுரங்க கழக துணைத்தலைவர் பாலகுணசேகரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்பரை அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பஞ்சாபிகேசன், பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42) .இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உதவி அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பணியிலிருந்த அர்ச்சகர் ஞானசுந்தரம் மந்திரங்கள் கூறுவதற்காக மைக்கை கையில் எடுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஞானசுந்தரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து திருவாரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.
    • சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தில்லைவிளாகம், வடகாடு முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை திருவாரூர் போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.

    தற்போது தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடக்கும் பாடைக்காவடி விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். வலங்ைகமான் மகாமாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் வலங்கைமான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூஜை ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் தமிழ் மணி, நிர்வாக மேலாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது.
    • போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.

    பேரணியானது பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின், அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், முருகவேல், மனோகரன், போலீசார் மற்றும் கொறுக்கை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • ராஜதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    திருவாரூர்:

    ஆடி கடைசி வெள்ளி கிழமையை யொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ராகு கால துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதேபோல், திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். அப்போது பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.

    திருவாரூர் காகிதக்காரத்தெரு சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தீமிதி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மகோவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்க ளில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    கோவில் முன்பு அமைக்க ப்பட்டிருந்த குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அனுமந்தபுரம் கிராமத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 7ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது37).

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வினோதா (28).

    இவர்களுக்கு ஸ்ரீவந்த் (5) என்ற மகனும், யாஷிகா (3) என்ற மகளும் உள்ளனர்.

    நேற்றுமுன்தினம் வினோதா அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோதா உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வினோதாவின் தாய் செண்பகம் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வினோதாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனாமணி விசாரணை நடத்தி வருகிறார்.

    • கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பியில் குமாரின் உடல் சிக்கி, அவரது வயிறு மற்றும் தொடை பகுதியில் பலமாக குத்தியது.
    • மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் நன்னிலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (38). மகள் ஓவியலட்சுமி (17). கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று குமார் அவரது மனைவி மற்றும் மகளுடன் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பனங்குடியில் இருந்து திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின், பொருட்கள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது விசலூர் என்ற இடத்தில் செல்லும்போது, அங்கு நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி விழுந்தார்.

    இதில் கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பியில் குமாரின் உடல் சிக்கி, அவரது வயிறு மற்றும் தொடை பகுதியில் பலமாக குத்தியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும், அவரது மகளுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவும், மனைவி தேன்மொழிக்கு முகம், கை, கால்களில் பலத்த காயங்களுடன் உள்ளே கிடந்துள்ளார்.

    அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், இந்த பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் எவ்வித அறிவிப்பு பலகையோ, சாலை தடுப்புகள் வைக்காததும், அப்பகுதியில் மின் விளக்கு வசதிகள் இல்லாததுமே காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.

    மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடுமையான வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
    • நேற்று நள்ளிரவு முதல் இரண்டு மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    திருவாரூர்:

    கடந்த இரண்டு மாதங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

    குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்க ப்பட்டனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்று வீசிவந்த நிலையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், சண்ணாநல்லூர், மாங்குடி, கமலாபுரம், பூந்தோட்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் மக்கள் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வந்த நிலையில் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 5 சென்டிமீட்டர் மழை அளவு, திருவாரூரில் 2 சென்டிமீட்டர், மன்னார்கு டியில் 1.7 சென்டிமீட்டர், வலங்கைமான் நீடாமங்க லத்தில் 1 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் 135 மில்லி மீட்டர் மலையளவு பதிவாகியுள்ளது.

    ×