search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • சில இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்தனர்.
    • தொடர்ந்து மழை பெய்வதால் சாம்பா நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:-

    மேட்டூர் அணை கடந்த ஜுன் 12-ந் தேதி திறக்கப்பட்டு காவிரி நீர் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு திறக்கப்பட்டது.

    இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போதுமான தண்ணீர் வராததாலும், போதிய மழை பெய்யாததாலும் குறுவை சாகுபடியை விவசாயிகள் ஒரு சில இடங்களில் மட்டும் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி செய்தனர்.

    தற்போது சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    முத்துப்பேட்டை தாலுகா தில்லை விளாகம், உதயமார்த்தாண்டபுரம், இடும்பாவனம், தம்பிக்கோட்டை கீழக்காடு, மேலநம்மகுறிச்சி, கோவிலூர், ஜாம்புவானோடை, ஆலங்காடு, உப்பூர் போன்ற பகுதிகளில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் முத்துப்பேட்டை பகுதிகளில் சம்பா நடவு பணிக்காக வயல்களில் விவசாயிகள் நாற்று பறிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம் ஆகியவற்றை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்.
    • கோவிலின் வரைபடத்தை வைத்து மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ராஜகோபா லசாமி கோவிலில் குடமு ழுக்கு திருப்பணி ஆயத்த பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது நுழைவு வாயிலில் உள்ள 16 கால் மண்டபம், கோவில் ராஜகோபுரம், மற்றும் செங்க மலத்தாயார், ராஜ கோபாலசாமி சன்ன திகள் ஆகியவற்றை பார்வையி ட்டார்.

    தொடர்ந்து, கோவிலின் வரைபடத்தை வைத்து கோவிலில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, கோவில் நிர்வாக அலுவலர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை மின்சார பிரிவு செயற்பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தொல்லியல் துறை சேகர், மாவட்ட வன அலுவலர் ஸ்ரீதர், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், தி.மு.க. நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர் முத்துவேல் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியசாமி, பைங்காநாடு இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும்
    • வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும்.

    திருத்துறைப்பூண்டி

    திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான வளர் இளம்பருவ மாணவ- மாணவிகளுக்கான வீட்டு காய்கறி தோட்டம் அமைக்கும் போட்டியில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்:-

    மாணவர்கள் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய அரிசி, தானியங்கள், இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை சமையலுக்கு உபயோகிக்க வேண்டும்.

    வீடுதோறும் காய்கறி தோட்டங்கள் அமைக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.பின்னர், வட்டார திட்ட அலுவலர் அபிநயா பங்கேற்று பேசுகையில்:-

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இயற்கை காய்கறி தோட்டம் அமைத்து பராமரிப்பது நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறப்பாக காய்கறி தோட்டம் அமைத்த 5 மாணவர்களை தேர்வு செய்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருங்காலத்தில் மேலும் மாணவர்கள் இதில் ஈடுபட இத்திட்டம் ஊக்கமாக அமையும் என்றார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், வட்டார மேற்பார்வை யாளர்கள் கமலா, ரேணுகா, சந்திரா, ஊட்டசத்து ஒருங்கிணை ப்பாளர் ராஜவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருநங்கையருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் சார்ந்த புதிய கற்றல் செயல்முறையாகவும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையருடன் மாண வர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திருநங்கை பட்டதாரி ரதிமீனா, யாஷிகா, ரகசியா, குபேரன் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளிடம் கலந்துரையாடினர்.

    திருநங்கையர் குழுத் தலைவி ரதிமீனா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகையில்

    "திருநங்கை"என்ற சொல்லை முத்தமிழறிஞர் கலைஞர் மூன்றாம் பாலினத்த வர்க்காக உருவாக்கிய விதம் குறித்தும் திருநங்கைகளுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்ட விளிம்புநிலையினராய் இருந்த திருநங்கையர் வாழ்வை மறுமலர்ச்சி பெறச் செய்தமை குறித்தும் பேசினர்.

    எங்களைப்போன்ற வர்கள் வாழ்வில் சாதிக்கும் போது உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்த முதுகலைத் தமிழாசிரியர் ராசகணேசன் பேசுகையில்நா ம் வணங்கும் ஆடல்வல்லான் சிவபெரு மானே சிவமும் சக்தியும் கலந்த அர்த்த நாரீஸ்வர ராகவே இருந்து பெண்ணுக்குள் ஆண்மையும் ஆணுக்குள் தாய்மையும் உறைவதை உணர்த்துகிறார்.

    எல்லாக் குழந்தைகளும் ஆணாக அல்லது பெண்ணாகப் பிறக்கின்றனர்.

    வளரும்போது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக திருநங்கையர் களாக அடையாளப்ப டுகின்றனர்.

    நவீன அறிவியல் யுகத்தில் இம்மாற்றங்களைப் பெற்றோர்கள் முன்னரே அடையாளம் கண்டு உரிய நேரத்தில் உரிய முறையில் ஹார்மோன் சிகிச்சை அளித்தால் இதனைத் தொடக்கத்திலேயே சரி செய்யலாம் என்றார்.

    மாணவர்கள் நேரிடை யாக திருநங்கையருடைய வாழ்க்கைச்சூழல், கல்விநிலை குறித்தும் திருநங்கையரிடமே நேர்காணல் நிகழ்த்தினர். மாணவர்கள் வினவிய அனைத்துக் கேள்விகளுக்கும் திருநங்கையர் எதார்த்தமான பதில்களை வழங்கினர்.

    முடிவில் பட்டதாரித் தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழையால் சம்பா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    அதன்படி, தஞ்சையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. இன்று காலை விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல், மாவட்டத்தில் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று மாலை அல்லது இரவும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையின் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சம்பா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு செ.மீட்டரில் வருமாறு:-

    நீடாமங்கலம்- 5.4, திருவாரூர்- 3.3, குடவாசல்- 2.3, அதிகபட்சமாக நன்னிலத்தில் 6.6 செ.மீட்டர் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழையின் மொத்த அளவு 22.8 செ.மீட்டர் பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (10-ந் தேதி) மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

    இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர். அன்றாட வேலைகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    நாகப்பட்டினம்- 20, திருப்பூண்டி-5, வேளாங்கண்ணி-28, திருக்குவளை-5 அதிகபட்சமாக தலைஞாயிறில் 30 மி.மீட்டல் பதிவாகி உள்ளது.

    இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நேற்று முழுவதும் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்தது. பின்னர், இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று அதிகாலையும் சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணபிரான். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது அண்ணன் அருண் (வயது 38), மணிவேல், கவிராஜ், சுப்பிரமணியன் ஆகியோருடன் நேற்று மாலை தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதேபோல், மற்றொரு படகில் குட்டியாண்டியூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48) என்பவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக படகில் இருந்து மீன்பிடித்து கொண்டிருந்த அருண் என்பவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். படகில் இருந்தவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி படுகாயமடைந்த அருணை பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல், மற்றொரு படகில் மீன்பிடித்து கொண்டிருந்த ராஜேந்திரன் மீதும் மின்னல் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக படகில் இருந்தவர்கள் கரைக்கு திரும்பி ராஜேந்திரனை ஆம்புலன்சு மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அருண் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர்கள் கதறி அழுதனர். அவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    தகவல் அறிந்த தாசில்தார் சரவணன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன், பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த அருணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • பழங்குடியினர் நல அலுவலகத்தில் 13.11.2023 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    திருவாரூர்,

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டர். அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

    இதனைத்தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டிற்கான டாக்டர்.அம்பேத்கர் விருது அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோரில், இந்த ஆண்டு டாக்டர். அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று உரிய சான்றுகளுடன் வரும் 13.11.23 தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    • மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
    • சாலையோர மரத்தில் மோதி மாணவர் பலியானார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார் (50) விவசாயி.

    இவர் நேற்று தனது உறவினருடைய வயலில் வேலை பார்த்து ள்ளார்.

    பின்னர் அருகில் உள்ள விஜயராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்த பம்புசெட்டில் குளித்து விட்டு அங்கிருந்த கம்பி கொடிக் கம்பத்தில் துண்டை காய வைத்து விட்டு வீடு திரும்பினார்.

    இந்நிலையில் காலையில் குளிக்க அங்கு சென்றுள்ளார்.

    பின்னர் பம்புசெட்டு அருகே உள்ள கொடிகம்பத்தில் கிடந்த துண்டை எடுத்தார். அப்போது திடீரென மின்சாரம் அவரை தாக்கியது.

    இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் வயலுக்கு சென்ற குமார் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

    அப்போது தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் கன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டைகீழத் தெருகிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.

    இவரது மகன் ரிஷால் ( வயது 20).

    இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

    அதே போல் இன்றும் கல்லூரிக்கு ரிஷால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மன்னார்குடி குருவை மொழி கிராமத்தின் அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ரிஷால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரிஷால் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் ரோட்டரி சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக சங்க செயலாளர் ரோட்டரியன் சோமசுந்தரம் அனைவ ரையும் வரவேற்றார்.

    வட்டார கல்வி அலுவலர்கள் ரோட்டரியன் அறிவழகன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டரியன் வாசுதே வனின் பங்களி ப்புடன் சிறப்பாக கொண்டா டப்பட்ட விழாவில் சுமார் 30 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.

    இதில் ரோட்டரியன் ஏ.ஆர்.ஜான், ரோட்டரியன் தனிகாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் வேதரத்தினம், ஆசிரியர் சுபாஷ், வார்டு உறுப்பினர் எழிலரசன், ஆசிரியர் வேதரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்க பொருளாளர் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.

    • அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, சுற்றுச்சூழல் துறை, திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்க விழா நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி நகராட்சி வளாகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமை தாங்கினார். பொறியாளர் பிரதான் பாபு, தேசிய பசுமைப்படை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    இந்த தீபாவளியில் அனைவரும் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ஆஸ்பத்திரிகள், வயதான வர்கள், குழந்தைகள், குடிசை வீடுகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    அரசு அறிவித்த நேரங்களில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மேலாளர் சீதாலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரையன், பெரமையன், ஈஸ்வரன், தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    • நன்னிலம்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அங்கு சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

    திருவாரூர்:

    நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருக்கண்டீஸ்வரம் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த கோவிந்தவேல் (வயது 23) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தவேலை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம், வடைமாலை சாற்றப்பட்டிருந்தது.

    பின்னர் பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கும், நரிக்குடி எமனேஸ்வரர்கோவிலில் உள்ள பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது

    • காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.
    • தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் த.மா.கா. மூத்த தலைவர் தெட்சிணாமூர்த்தி உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது வீட்டுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

    காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.-பா.ஜனதா உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம்.

    தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சியை வலுப்படுத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ தஞ்சை மாவட்ட தலைவர் ரங்கராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் தினகரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், வட்டார தலைவர்கள் காந்தி நாராயணன், சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ஜி.கே.வாசன் எம்.பி, ஜாம்புவானோடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்தவர்களை அரிவாளால் விரட்டிய முதியவர் வைரகண்ணுவை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    ×