search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்
    X

    வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்

    • 9 பேர் படுகாயம்
    • போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த மினி லாரி மோதியது.

    அப்போது 2 வாகனங்களையும் டிரைவர்கள் நிறுத்தி இறங்கி பார்த்து ெகாண்டிந்தனர். அப்போது திடீரென அதே வழியாக பின்னால் வந்த கண்டெய்னர் லாரி ஏற்கனவே விபத்துக்குள்ளாகி நின்றிருந்த மினிலாரி மற்றும் கார் மீதும் வேகமாக மோதியது.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் மணி கண்டன்(வயது 48) மினி லாரியில் பயணம் செய்த ராகுல் (18) யோகராஜ் (20) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்,

    அதேபோல் காரில் பயணம் செய்த 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து காரணமாக பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவது பாதித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி க்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி டிரைவர் உட்பட 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதுகுறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×