search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    5 அடி நீளமுள்ள பாம்பு மீட்பு
    X

    5 அடி நீளமுள்ள பாம்பு மீட்பு

    • தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறபள்ளி அடுத்த புகையிலைக்காரன் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான படை வீரர்கள் விரைந்து சென்று நாக பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டிற்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

    Next Story
    ×