search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
    X

    நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

    • ஆலங்காயம் அருகே கிராம சபை கூட்டத்தில் மோதல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில் தி.மு.க. பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பெயரில் பணிதள பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்வதால் அவரை மாற்றி, வேறு ஒருவரை புதியதாக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஞானம் மற்றும் சுதாகர் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம், கடும் மோதல் ஏற்பட்டது.இதை தொடர்ந்து 2 பேரும் வாணியம்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் இரு தரப்பினரும் ஆலங்காயம் போலீசில் தனிதனியாக புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் தி.மு.க பிரமுகர் ஞானம் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுதாகர் (வயது 40), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (35), பார்த்திபன் (40), திருப்பதி (32) ஆகிய 4 பேர் மீதும் ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×