search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீட்டிற்குள் நுழைந்த பாம்பு
    X

    வீட்டிற்குள் நுழைந்த பாம்பு

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோனி இவரது மனைவி ஷைனி.

    இவர்கள் வீட்டில் நேற்று தனது குடும்பத்துடன் இருந்த போது திடீரென பாம்பு நுழைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பாம்பை பிடித்தனர்.

    பின்னர் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை வனத்துறையினர் அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    Next Story
    ×