search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மது பாட்டிலில் தீ வைத்து சூப்பர் மார்க்கெட்டில் வீசிய வாலிபர்
    X

    மது பாட்டிலில் தீ வைத்து வீசிய வாலிபரை படத்தில் காணலாம்.

    மது பாட்டிலில் தீ வைத்து சூப்பர் மார்க்கெட்டில் வீசிய வாலிபர்

    • கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
    • பொருட்கள் எரிந்து நாசமானது

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது 33). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடைக்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது சவுகத் அலியிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது.

    இதனை தடுக்க வந்த சவுகத் அலியின் உறவினர் ஒருவர் மாற்றுத்தி றனாளியான அவர் இது குறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் தட்டி கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாற்றுத் திறனாளியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    நேற்று இரவு மீண்டும் சவுகத் அலி கடைக்கு மது பாட்டிலுடன் வாலிபர் வந்தார். அப்போது திடீரென மது பாட்டிலில் தீ வைத்து கடைக்குள் வீசினார்.

    இதில் கடையில் இருந்த சில பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து சவுகத் அலி வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை காட்சிகளை வைத்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×