search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காதல் தகராறில் வாலிபர் வீடு தீ வைத்து எரிப்பு
    X

    வாலிபர் வீடு எரிக்கப்பட்டுள்ள காட்சி.

    காதல் தகராறில் வாலிபர் வீடு தீ வைத்து எரிப்பு

    • பெண் வீட்டார் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த போஸ்ட்மேன் வட்டம், பார்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஜய் (வயது 25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காதலர்கள் ரகசியமான இடத்தில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர் 2 பேரையும் கண்டித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை விஜய் மற்றும் இளம்பெண் திடீரென வீட்டை விட்டு வெளியேறினர்.

    பெண்ணின் பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் விஜய் வீட்டை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் வீட்டிலிருந்த பொருட்கள் மட்டும் தீயில் கருகி நாசமானது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×