search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போதை பொருள் விற்ற பெட்டி கடைக்காரர் கைது
    X

    போதை பொருள் விற்ற பெட்டி கடைக்காரர் கைது

    • ரோந்து பணியின்போது சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் பெட்டி கடையில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது போதை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசர் பெட்டிகடை உரிமையாளர் ராஜா (வயது 54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கடையில் இருந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×