search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தரமற்று அமைக்கப்பட்ட தார் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்த பொதுமக்கள்
    X

    தரமற்று அமைக்கப்பட்ட தார் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்த பொதுமக்கள்

    • ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் சாலை போடப்பட்டது
    • ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்நாயக்கன்பட்டியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதியதாக தார் சாலை போடப்பட்டுள்ளது.

    இந்த தார் சாலை 25 இன்ச் அளவில் போடப்பட வேண்டும். ஆனால் இந்த சாலை தரமற்று போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தார்சாலை தரமற்ற நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் இந்த தார் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்தும் வீசி எரிந்தனர்.

    தரம் இல்லா சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×