search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தி.மு.க. மாணவரணி சார்பில் 3 நாள் கருத்தியல் பயிலரங்கம்
    X

    ஏலகிரி மலையில் 3 நாள் நடைபெற்ற தி.மு.க. மாநில மாணவரணி கருத்தியல் பயிலரங்கம் பயிற்சி நிறைவு விழாவில் மாநில மருத்துவ அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன் பேசிய போது எடுத்த படம்.

    தி.மு.க. மாணவரணி சார்பில் 3 நாள் கருத்தியல் பயிலரங்கம்

    • அமைச்சர் துரைமுருகன் முகாமை தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் தி.மு.க. மாணவரணி சார்பில் 3 நாள் கருத்தியல் பயிலரங்க கூட்டம் கடந்த 27-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    இந்த பயிலரங்க கூட்டத்திற்கு மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் தலைமை தாங்கினார். மாணவரணி மாநில நிர்வாகிகள் இரா. ராஜீவ் காந்தி, சி. ஜெரால்டு, எஸ். மோகன், த. சோழராஜன், ரா. தமிழரசன், பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி. எம். ஆனந்த், கா. பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே. பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டி கலந்துக்கொண்டு, அவரது வழிகாட்டுதலோடு, வாலாசா வல்லவன், பொள்ளாச்சி மா. உமாபதி, மதிவதனி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    நிறைவு நாளான நேற்று நடந்த கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திருவண்ணாமலை சி. என்.அண்ணாதுரை எம்.பி., திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×