search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரெயில் மோதி காவலாளி சாவு
    X

    கோப்புப்படம்

    ரெயில் மோதி காவலாளி சாவு

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னகூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). வாணியம்பாடி தனியார் மேல்நிலைப்பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு 2 கைகள் மற்றும் கால்கள் துண்டாகி இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×