search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பத்தூரில் பலத்த காற்றுடன் மாலை
    X

    ஜலகாம்பாறை அருவி

    திருப்பத்தூரில் பலத்த காற்றுடன் மாலை

    • ஜலகாம்பாறை அருவியில் வெள்ளம்
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மேகம் மந்தமாக காணப்பட்டது. திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி ,ஆம்பூர் ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

    தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். மழை வெள்ளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்பத்தூர் 15.7 ஆம்பூர் 7.4 நாட்றம்பள்ளி 7.2, ஜோலார்பேட்டை 6, வாலாஜா 45, ஆற்காடு 56.2, காவேரிபாக்கம் 89, அம்மூர் 38, கலவை 82.4.

    Next Story
    ×