search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொக்கு மருந்து குடித்து மேஸ்திரி தற்கொலை
    X

    கொக்கு மருந்து குடித்து மேஸ்திரி தற்கொலை

    • போலீசார் விசாரணை
    • 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவர் பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு திடீரென கொக்கு மருந்து குடித்து இறந்து கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×