search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஒரே நாளில் 3 பாம்புகள் மீட்பு
    X

    ஒரே நாளில் 3 பாம்புகள் மீட்பு

    • தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி தர்மராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சாரைபாம்பை பிடித்தனர். அதேபோல் ஆலங்காயம் அடுத்த மிட்டூர் பகுதியில் மெக்கானிக் கடையில் புகுந்த 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பு மற்றும் ஆலங்காயம் படகுப்பம் வண்ணாங்குட்டை பகுதியில் வீட்டின் அருகில் இருந்த 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பையும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

    பிடிபட்ட 3 பாம்புகளும் ஆலங்காயம் வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டு, காப்பு காட்டில் விடப்பட்டது.

    Next Story
    ×