search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர்
    X

    போலீசார் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தை படத்தில் காணலாம்.

    தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர்

    • வாலிபர் கொலை செய்து புதைப்பு
    • கையில் ‘ஜே’ என ஆங்கிலத்தில் பச்சை குத்தியுள்ளார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ள பலக்கல்பாவி முருகன் கோவில் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த 21-ந் தேதி சிலர் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அங்கு கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்து புதைக்கப்பட்ட வாலிபர் உடலை மீட்டனர்.

    அதனை தொடர்ந்து தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. கழுத்து, மார்பு, வயிறு பகுதிகளில் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வாலிபரின் மர்ம உறுப்பும் சேதப்பட்டிருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து பிணத்தை புதைத்திருப்பது தெரியவந்துள்ளது.

    கொலைகளைப் பிடிக்க துணை போலீஸ் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலை செய்யப்பட்டவர் இடது கையில் 'ஜே' என ஆங்கில வார்த்தையால் பச்சை குத்தியுள்ளார்.

    போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில போலீஸ் நிலையங்களில் காணாமல் போன ஆண்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இறந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதன்படி இறந்தவரின் விவரத்தை கண்டறிவதோடு மற்றும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவரின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை குறிப்பிட்டு போலீசார் துண்டு பிரசாரம் விநியோகம் செய்துள்ளனர்.

    இறந்தவர் யார்? என்று தெரிந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×