search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சாலையில் ஏர் ஓட்டியதால் பரபரப்பு
    X

    சாலையில் ஏர் ஓட்டியதால் பரபரப்பு

    • அதிகாரிகள் ஆய்வு
    • பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில், ஊராட்சி மூலம் போடப்பட்ட கிராம சாலையை அப்பகுதி பொது மக்கள் சுமார் 30 வருடங்களாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இடத்தின் உரிமையாளர் திடீரென டிராக்டர் மூலம் சாலையில் ஏர் ஓட்டினார். இதனால் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாட்டறம் பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப் -கலெக்டர் பானுமதி தலைமையில், தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பொதுமக்கள் இந்த பாதையை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்டும் என அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×