search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதி
    X

    ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதி

    • காப்புக்காட்டிற்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை
    • வனத்துறை எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பொங்கல் பண்டிகையை யொட்டி ஏலகிரிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் குரங்குகள் மற்றும் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கக்கூடாது .

    வாகனம் செல்லும் சாலையினை தவிர்த்து பிற பகுதிகளுக்குள் செல் லக்கூடாது.

    ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்லும் நபர்கள், நீர்வீழ்ச்சி தவிர்த்து காப்புக்காடு பகுதிகளில் அத்து மீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

    Next Story
    ×