search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழக- ஆந்திரா வனப்பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ
    X

    தமிழக- ஆந்திரா வனப்பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ

    • பொதுமக்கள் பீதி
    • ஆந்திர வனதுறையினருக்கு தகவல்

    ஆலங்காயம்:

    தமிழக எல்லையான ஆந்திர மாநிலம் குப்பம் அருகே வனப்பகுதி உள்ளது. நாயனூர் - பெரிய வளைவு சாலை ஓரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாடுவதை தங்கள் செல்போன் மூலம் பதிவு செய்தனர். அதனை சமூக வலைதள ங்களில் பதிவிட்டு ள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பொது மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆந்திர வனதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்து றையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    மேலும் சிறுத்தை தமிழக எல்லைக்குள் புகுந்துள்ளதா? ஆந்திரா எல்லைக்குள் புகுந்ததா என கண்காணித்து வருகின்றனர். தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள கொல்லப்பள்ளி, பெத்த வங்கா பகுதிகளுக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமே உள்ளதால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை நடமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    Next Story
    ×