search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புப்படம்

    கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    • காலி பணியிடங்கள்
    • வருகிற 1-ந்தேதி கடைசி நாள்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர், திருப்பத்தூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு சிக்கணம் மற்றும் கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 1-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    இதற்கான எழுத்துத் தேர்வு 24.12.2023 அன்று பகல் 10 மணிமுதல் 1 மணி வரை திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி.

    முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து வகுப்பினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

    விண்ணப்பதாரார்கள் எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இடஒதுக்கீடு, இனச்சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.

    மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://drbtpt.in வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×