search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு கும்மிடிப்பூண்டி கி.வேணு உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பன்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மகன் கி.வே.ஆனந்தகுமார் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வருகிறார். மகள் உமாமகேஸ்வரி திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். காலமான மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு உருவப்படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், எம்.வி.பேரடைஸ் திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கி.வேணு படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. கி.வே.ஆனந்தகுமார், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் வரவேற்றார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான ராணிப்பேட்டை காந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஆ.கிருஷ்ணசாமி, பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு கி. வேணு உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், இ.ஏ.பி.சிவாஜி, பா.சே.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, வெ.அன்புவாணன், கே.வி.லோகேஷ், ஏன்னம்பாக்கம் சம்பத், வக்கீல் வெங்கடாஜலபதி, டி.ஜே.ஜி.தமிழரசன், மு.மணிபாலன், டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, ஆ.சத்தியவேலு, தங்கம்முரளி, பரிமளம், செல்வசேகரன், ரமேஷ்ராஜ், பரிமளம்விஸ்வநாதன், ரவிக்குமார், அறிவழகன், பி.முத்து, டி.கண்ணதாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
    • அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரவுடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், உதவி கமிஷனர் ராஜா ராபர்ட் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகளின் செயல்பாடுகள் பற்றி அப்பகுதிமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    • ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
    • தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னல் பல்வேறு காரணங்களால் முகத்துவரப்பணி நிறத்தப்பட்டது.

    இந்நிலையில் முகத்துவார பகுதியில் மணல் சேர்ந்து அடைத்து உள்ளால் மீனவர்களால் படகுகளை அவ்வழியாக கொண்டு செல்ல முடியவில்லை.

    இதனால் கடந்த 2 வாரமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன் மார்க்கெட்டிற்கு மீன், நண்டு வரத்து முற்றிலும் குறைந்து விட்டதால் அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையே பழவே ற்காட்டில் முகத்துவாரம் அடைப்பட்டு இருப்பதை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, மீன்வளத்துறை பொன்னேரி உதவி இயக்குநர் கங்காதரன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது நான்கு இடங்களில் முகத்துவாரம் வெட்டுவதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கா ன பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.
    • கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

    விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

    இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.

    இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

    விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.

    • நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7- க்குட்பட்ட 15 வார்டுகளில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் விஜிலா மற்றும் மின்சாரத்துறை, வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மண்டலத்துக்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தேங்கும் பட்சத்தில் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிக திறன் கொண்ட மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    அதேபோல் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தங்குவதற்கான திருமண மண்டபங்கள், பள்ளி வகுப்பறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல குழு தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், உஷா நாகராஜ், சாந்தகுமாரி, செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார்,குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரில் வசித்து வந்தவர் புஷ்பா (வயது54). இவர் நேற்று இரவு ஹீட்டர் பயன்படுத்தி வாளியில் வெந்நீர் வைத்தார். சிறிது நேரம் கழித்து வெந்நீர் சூடாகிவிட்டதா என்று அவர் தொட்டு பார்த்ததாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
    • மனமுடைந்த கோகுல் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியம்மா. இவரது மகன் கோகுல் (வயது 24) வெல்டரான இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று இரவு வழக்கம்போல் கோகுல் மதுகுடித்து வீட்டுக்கு வந்தார். இதனை குட்டியம்மா கண்டித்தார்.இதனால் தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோகுல் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
    • தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்

    செங்குன்றம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். ரவுடிகள் பட்டியலை சேகரித்து அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த மாதம் சோழவரம் அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடிகள் முத்துசரவணன், சதீஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பெரும்பாலான ரவுடிகள் தங்களது செயல்களை குறைத்து தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ரவுடிகளை அவர்களது செயல்பாடுகளை பொறுத்து ஏ, பி, சி என்று 3 பிரிவாக பிரித்து உள்ளனர். இதில் மொத்தம் சுமார் 1500 ரவுடிகளின் பெயர்கள் போலீசாரிடம் உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து நேற்று இரவு செங்குன்றம், அம்பத்தூர், எண்ணூர், மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டது. துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் ராஜாராபர்ட், பரமானந்தம் மற்றும் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரவுடிகளின் பட்டியலுடன் அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சோதனை செய்தனர்.

    ஏ பிளஸ் ரவுடியான சுருட்டை வெங்கடேசன், குள்ள கார்த்தி, பாம்பு நாகராஜ், ஏ பிரிவை சேர்ந்த பாம் ராஜேஷ், அருண், இளந்தமிழன், தினேஷ் உள்ளிட்ட ரவுடிகள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று வேட்டை நடந்தது. 100 ரவுடிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இரவு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது.

    சோதனையின் போது ரவுடிகளின் குடும்பத்தினரிடம், ரவுடியின் இருப்பிடம் மற்றும் தற்போது அவர்களது செயல்பாடுகள் பற்றி போலீசார் கேட்டறிந்தனர். மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இந்த வேட்டையின் போது ரவுடிகள் யாரும் சிக்கவில்லை. எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரவுடிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும். அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் தொல்லை இருந்தால் பொதுமக்கள் போலீசில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கே. ஜெயக்குமார் எம். பி., மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம். பி., மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.

    அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை தலைவராக கொண்டக்கரை ஆர்.ஜெயபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • பஸ் நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்க சென்றனர்.
    • மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த அண்ணாமலை சேரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் மனைவி மாலினியுடன் சேர்ந்து பொன்னேரியில் உள்ளவங்கியில் ரூ.2லட்சத்து 25 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்டில் வைத்து விட்டு அவர்கள் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    • வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருவாலங்காடு அடுத்த மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் மணவூர் ரெயில் நிலையம் அருகே மளிகைகடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்ற போது கடையின் ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ.5600 ரொக்கம் மற்றும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணை பாக்கெட்டுகள், மளிகை பொருட்களை கொள்ளையர்கள் அள்ளி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.
    • எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.

    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கம் அண்ணா சத்யா நகர் பகுதியில் மதுபோதையில் கணவர் அடித்து உதைப்பதாக பெண் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணை தாக்கிய வாலிபர் வீட்டில் டிபன் பாக்ஸ்களை அடுக்கி வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று கேட்ட போலீசார் டிபன் பாக்சுகளை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் டிபன் பாக்சுக்குள் குண்டுகள் உள்ளது திறந்தால் வெடித்துவிடும் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பின் வாங்கினார்கள். அதற்குள் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்பதும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி என்பதும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் டிபன் பாக்சை திறந்து பார்த்தனர். அப்போது டிபன் பாக்சுக்குள் 2 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டையில் இருந்து தனது எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார்.

    ரவுடிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி வெளியில் செல்லும்போது டிபன்பாக்ஸ் குண்டுகளோடு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    இதையடுத்து ரவுடி கார்த்திக் சதி திட்டம் தீட்டும் நோக்கத்தில் சென்னையில் பதுங்கி இருந்தாரா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசா ரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×