search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கெட்டுப்போன இறைச்சி சாப்பிட்ட தொழிலாளி சாவு
    X

    கெட்டுப்போன இறைச்சி சாப்பிட்ட தொழிலாளி சாவு

    • சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்
    • இன்று உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

    ஆரணி:

    சத்தீஷ்கர் மாநிலம் ரேவியூட் டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்சார் (வயது 22). இவர் ஆரணி அடுத்த குரு மந்தாங்கள் கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருடைய செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவ ருடன் அதே மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பணியாற்று கின்றனர். நேற்று முன்தினம் இரவு இறைச்சியை சாப்பிட்ட நிலையில் உடல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஆரணி அரசு மருத்துவமனை யில் முகமது சம்சார் சேர்க்கப் பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

    இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் சுரேஷ் என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் முகமது சம்சார் சாப்பிட்ட இறைச்சி 2 நாட்களுக்கு முன்பு சமைத்தது என்பதும் கெட்டுப் போனதால் உடல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து முகமது சம்சார் உடலை அவரது சொந்த ஊருக்கு இன்று இலவச வாகனம் மூலம் அனுப்புவதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×