search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஏ.டி.எம். மையங்களில் திருடிய ரூ.6 லட்சம் எங்கே?
    X

    ஏ.டி.எம். மையங்களில் திருடிய ரூ.6 லட்சம் எங்கே?

    • கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை

    போளூர்:

    திருவண்ணாமலை நகரில் கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (35 வயது), ஆசாத் (36), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குதரத்பாஷா (43), அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்சர்உசேன் (26), நிஜாமுதீன் (37) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் போளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு எம்.காளிமுத்துவேல், அவர்களை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். போளூரில் வைத்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் இதுவரை ரூ.5 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீதி 67 லட்சத்தை மீட்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×