search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. கண்ணன் நேரில் ஆய்வு
    X

    டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. கண்ணன் நேரில் ஆய்வு

    • வழக்கு கோப்புகள் சோதனை
    • மரக்கன்றுகள் நட்டினார்

    செய்யாறு:

    செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி என். கண்ணன் நேற்று முன் தினம் நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வு செய்ய வந்த ஐ.ஜி. கண்ணனை திருவண்ணாமலை எஸ்பி கி.கார்த்திகேயன், செய்யாறு டிஎஸ்பி வி. வெங்கடேசன் ஆகியோர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    செய்யாறு காவல் உட்கோட்டத்தில் உள்ள 6 போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புகளை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்தார்.

    மேலும் போலீசாரின் தேவைகள் உட்பட பல தகவல்களை எஸ்.பி, டிஎஸ்பி இடம் கேட்டறிந்தார். ஆய்வுக்கு பின்னர் டிஎஸ்பி வளாகத்தில் தென்னை மரக்கன்று ஐஜி கண்ணன் நட்டு வைத்தார்.

    Next Story
    ×