search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊட்டியில் சுற்றுலா தொழில்முனைவோர் கூட்டமைப்பு கூட்டம்
    X

    ஊட்டியில் சுற்றுலா தொழில்முனைவோர் கூட்டமைப்பு கூட்டம்

    • ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தொழிலை பதிவு செய்ய வலியுறுத்தல்
    • சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல் மேலாளர் குணேஷ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அப்போது டூர் ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜெண்டுகள் ஆகியோர் ஒழுங்குமுறை சட்டவிதிகளின்படி தங்களின் தொழிலை பதிவு செய்ய வேண்டும். மேலும் உரிய அங்கீகாரம் தருவதன்மூலம் சுற்றுலா பயணிகளிடம் நம்பகதன்மை உருவாக்க வேண்டும் என்பவை தொடர்பாக கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

    நீலகிரி மாவட்ட மேக்சி கேப்-டிராவல் ஏஜெண்டுகள் உரிமையாளர் சங்க தலைவர் குலசேகரன், செயலாளர் நித்தின்சேகர், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் இம்பாலாபாபு, பிரீத்திரவி, பவானிரமேஷ், இம்பீரியல் நஞ்சுண்டன், ஸ்டேன்லி உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×