search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது
    X

    போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது

    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்கள் போலீசை கீழே தள்ளினர்
    • வழக்கு பதிந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் சேதுரெத்தினபுரம் பிரிவு அருகே சிலர் குடி போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற மணப்பாறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவர் பிரச்சனையில் ஈடுப்பட்டவர்களிடம் குடிப்போதையில் தகராறில் ஈடுபடுவது குறித்து கேட்ட போது அவரை கீழே தள்ளியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பிரச்சனையில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜீவா தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 22), கரிக்கான் குளம் பகுதியை சேர்ந்த ஜீவா (20), ரஞ்சித் குமார் (23), சேதுரெத்தினபுரத்தை சேர்ந்த கோபிநாத் (23) மற்றும் ஜீவானந்தம் (20) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×